தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கலைஞரின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு, ”எனது மரியாதை கலந்த வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன்.” என முதல்வர் விஜய் (CM Vijay) தெரிவித்துள்ளார்.
தமது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் விஜய் தெரிவித்துள்ளதாவது: முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்தநாளில், தமிழ் மொழி, இலக்கியம், திரைத்துறை, அரசியல், ஆட்சி நிர்வாகம் மற்றும் மாநில உரிமைகள் போன்றவற்றில் அவரது பங்களிப்பை நினைவுகூர்கிறேன்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் எனது மரியாதை கலந்த வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன். இவ்வாறு முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
