விஜய் ஆட்சியை கவிழ்க்க சதி: சென்னை பைனான்ஸ் நிறுவனத்தில் ரெய்டு!

Published On:

| By Mathi

Chennai Finance Company Raided Over Alleged Plot to Topple Vijay's Govt

முதல்வர் விஜய் ஆட்சியை கவிழ்க்க நடந்த சதி விவகாரத்தில் சென்னை சூளைமேட்டில் உள்ள தீபம் பைனான்ஸ் நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டு ரூ.2.82 கோடி பணம் கைப்பற்றப்பட்டதாக சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.

சென்னை போலீசார் இன்று ஜூலை 19-ந் தேதி வெளியிட்ட அறிக்கை: தமிழக சட்டப்பேரவைத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது, ஒரு தவெக MLA-விற்கு ₹35 கோடி லஞ்சம் வழங்க முயன்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் புலன்விசாரணையின் அடிப்படையில், சூளைமேட்டில் உள்ள தீபம் பைனான்ஸ் நிறுவனத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

ADVERTISEMENT

அச்சோதனையில் கணக்கில் காட்டப்படாத ₹2,82,49,000/- ரொக்கம் கைப்பற்றப்பட்டது. விசாரணையில், இந்த தொகை தவெக MLA-விற்கு வழங்கப்படவிருந்த முன்பணமாக ஏற்கனவே இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களால் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share