காதலை நிராகரித்ததால் சிறுமி மீது ஆசிட் வீச்சு: கர்நாடகாவில் பரபரப்பு!

Published On:

| By Kalai

Acid thrown on girl for rejecting love

காதலை நிராகரித்ததற்காக கர்நாடகாவில் சிறுமி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் ராமநகராவில், நாராயணப்பா ஏரி புறவழிச் சாலைக்கு அருகில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. 17 வயது சிறுமி திருமணம் செய்ய மறுத்ததால் இளைஞர் ஒருவர் அந்த சிறுமியின் முகத்தில் ஆசிட்டை வீசியுள்ளார்.

ADVERTISEMENT

இதில் அந்த சிறுமியின் இடது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தை அடுத்து தப்பி ஓடிய குற்றவாளியை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதற்கிடையில், கனகபுரா டவுன் போலீசார் போக்சோ சட்டம் மற்றும் ஐபிசி பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் ஆசிட் வீச்சு நடத்தியவர் கனகபுராவில் உள்ள குருப்பேட்டையில் வசிக்கும் மெக்கானிக் சுமந்த் என தெரிய வந்துள்ளது.

ADVERTISEMENT

குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு போன் செய்து வருமாறு கூறியதாக கூறப்படுகிறது. அவள் வந்ததும் அவளிடம் தன் காதலை தெரிவித்துள்ளான்.

அவள் மறுத்ததால், வாகனத்தின் என்ஜின்களை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் ஆசிட்டை அவள் முகத்தில் வீசியதால், முகத்தின் இடது புறம், கண் உட்பட சேதமானது. தாக்குதலுக்கு ரசாயனத்தை (தின்னராக) பயன்படுத்தியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

ஆசிட் வீச்சு தாக்குதலுக்கு ஆளான சிறுமியை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஹாலப்பா ஆச்சார் நேரில் சென்று பார்த்தார்.

சிறுமிக்கும் அவரது தாயாருக்கும் ஆறுதல் கூறிய அமைச்சர், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆச்சார், சிறுமியின் முதுகு, தோள்பட்டை மற்றும் கண்களில் காயம் உள்ளது. இதுபோன்ற சம்பவங்களை அரசு பொறுத்துக் கொள்ளாது என்றார்.

இது ஒரு கொடூரமான செயல், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்கக்கூடாது. இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் அனைத்து பணிகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு அரசு சார்பில் எனது கவலையை தெரிவித்தேன்.

சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  மேலும் ஒரு கண் மருத்துவரால் பரிசோதிக்கப்படுவார். சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சைக்கு அரசாங்கம் உதவும் என்றும் அமைச்சர் கூறினார்.

கலை.ரா

துருக்கி நிலநடுக்கம்: உயிரிழந்த பிரபல கால்பந்து வீரர்!

வட இந்தியாவின் முதல் அணுமின் நிலையம் : மத்திய அமைச்சர் தகவல்

Photo of author
Kalai
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share