’விடாது கறுப்பு’.. சிபிஎம் vs திமுக.. தொடரும் “கட்டுரை யுத்தம்”

Published On:

| By Mathi

CPM DMK

பிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், தீக்கதிர் நாளேட்டில் எழுதிய கட்டுரையை முன்வைத்து திமுகவின் நாளேடான முரசொலியில் தொடர்ந்து விமர்சன கட்டுரை வெளியாகி வருகிறது. இதற்கு சிபிஎம் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து சமூக வலைதளங்களில் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் முரசொலி நாளேட்டில் இன்று ஜூன் 25-ந் தேதி “பெ.சண்முகத்தின் உண்மை முகம்” தலைப்பில் 3-வது பகுதியை மூத்த பத்திரிகையாளர் ப.திருமாவேலன் எழுதி உள்ளார்.

ADVERTISEMENT

இன்றைய முரசொலியில் வெளியான கட்டுரை: ‘‘இந்த ஆட்சி மாற்­றம், தி.மு.க., அ.தி.மு.க. அல்­லாத ஒரு ஆட்சி வேண்­டும் என்­ப­தற்­காக மக்­கள் வாக்­க­ளித்­துள்­ளார்­கள்’’ என்­கி­றார் மார்க்­சிஸ்ட் செய­லா­ளர் பெ.சண்­மு­கம். அந்த நோக்­கத்­தோடு மக்­கள் வாக்­க­ளித்து இருந்­தால் விஜய் கட்சி 160 இடங்­க­ளுக்கு மேல் வெற்றி பெற்­றி­ருக்க வேண்­டும். பெரும்­பான்­மையை நிரூ­பிக்­கத் தேவை­யான 117 இடத்­தையே பெறா­த­வர் தான் விஜய். 16 தொகு­தி­க­ளில் மிகக் குறை­வான வாக்­கு­க­ளில் வெற்றி பெற்­றுள்­ளது அவர் கட்சி. எட்டு மாவட்­டங்களில் எந்­தத் தொகு­தி­யை­யும் கைப்­பற்­ற­வில்லை அவர் கட்சி.

1.55 கோடி வாக்­கு­களை தி.மு.க.கூட்­ட­ணி­யும், 1.34 கோடி வாக்­கு­களை அ.தி.மு.க. கூட்­ட­ணி­யும் பெற்­றுள்­ளன. தி.மு.க. கூட்­ட­ணியை விட 17 லட்­சம் வாக்­கு­களை தான் கூடு­த­லா­கப் பெற்­றுள்­ளார் விஜய். எனவே இதில் சண்­மு­கம் மகிழ்ச்சி அடைய எது­வும் இல்லை.

ADVERTISEMENT

அதே சண்­மு­கம் தான், ‘ஆட்சி அமைக்க எந்­த­வொரு கட்­சிக்கோ அணிக்கோ தனிப்­பெ­ரும்­பான்மை கிடைக்­க­வில்லை’ என்­றும் அதே கட்­டு­ரை­யில் சொல்­கி­றார். தனிப்­பெ­ரும்­பான்மை கிடைக்­காத விஜய், தி.மு.க. கூட்­ட­ணி­யில் வென்ற கட்­சி­க­ளுக்கு அமைச்­சர் பதவி கொடுத்­தும், அ.தி.மு.க.வின­ருக்கு அமைச்­சர் பதவி தரப்­போ­வ­தாக நடித்­தும் தனக்கு பெரும்­பான்மை இருப்­ப­தைப் போல காட்டி முத­ல­மைச்­சர் நாற்­கா­லி­யில் இருக்­கி­றார்.

ஆத­ரவு தந்த கட்­சி­களை நம்­பா­மல் அ.தி.மு.க.வின் நான்கு உறுப்­பி­னர்­களை ராஜி­னாமா செய்ய வைத்­துள்­ளார் விஜய்.இன்­னும் அதே பேரங்­களை நடத்தி வரு­கி­றார் விஜய். அவர்­கள் கணக்­குப் படி 15 தொகு­தி­க­ளுக்கு இடைத்­தேர்­தல் வர வைக்க வேண்­டு­மாம். அதில் விஜய் கட்­சியே வெற்றி பெறு­மாம். வெற்றி பெற்­ற­தும் இந்த நான்கு கட்­சி­க­ளுக்­கும் அல்வா தரப்­ப­டு­மாம். இத்­த­கைய கேவ­ல­மான குதிரை பேர ஆட்­சியை ஆத­ரிப்­பது அவ­மா­ன­மாக இல்­லையா?

ADVERTISEMENT

தி.மு.க. ஆட்சி மீது குற்­றச்­சாட்­டு­களை இந்­தக் கட்­டு­ரை­யில் அடுக்­கு­கி­றார் சண்­மு­கம். இது எது­வும் மே 4 ம் தேதிக்கு முன்பு வரை தெரி­ய­வில்­லையா? இரண்டு சீட் ஜெயிப்­ப­தற்கு வாயை மூடிக் கொண்டு இருந்­தாரா? தி.மு.க. ஆட்­சியை ஆத­ரித்து அவர் பேசிய பேச்­சு­களே அவ­ருக்­கான பதில்­கள். ‘ தி.மு.­க.­வின் தொடர் வெற்­றியை உறு­திப்­ப­டுத்­தும் 20 கார­ணி­கள்’ என்று ‘தீக்­க­தி­ரில்’ ஒரு பக்­கத்­துக்கு ( 19.4.2026) எழுதி இருக்­கி­றார்­கள். அதை எடுத்து அவரே படிக்­கட்­டும்.

‘‘கடந்த 2021-இல் ஆட்­சிப் பொறுப்­பேற்­றது முதல் முத­ல­மைச்­சர் மு.க. ஸ்டாலின் அவர்­கள் ஒரு திற­மை­யான நிர்­வா­கி­யா­கத் தன்னை நிலை­நி­றுத்­திக் கொண்­டுள்­ளார். எவ்­வி­தப் பாகு­பா­டு­மின்றி அனைத்து மாவட்­டங்­க­ளுக்­கும் சீரான வளர்ச்­சியை உறுதி செய்­துள்­ளார். குறிப்­பாக, பேரி­டர் காலங்­க­ளில் நேர­டி­யா­கக் களத்­தில் இறங்­கிப் பணி­யாற்­றிய விதம் மக்­கள் மத்­தி­யில் அவ­ருக்கு ஒரு ‘பாது­கா­வ­லர்’ என்ற பெய­ரைத் தந்­துள்­ளது. அரசு இயந்­தி­ரத்­தைச் சுணக்­க­மின்றி இயக்­கி­ய­து­டன், கட்­சித் தலை­வ­ரா­க­வும் கூட்­டணி கட்­சி­களை அர­வ­ணைத்­துச் செல்­வ­தில் அவர் காட்­டிய முதிர்ச்சி, இந்­தத் தேர்­த­லில் அவ­ருக்கு மிகப்­பெ­ரிய பல­மாக உரு­வெ­டுத்­துள்­ளது” என்று தான் தொடங்­கி­யது இந்­தக் கட்­டுரை.

கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் தொகை வாழ்­வா­தார மாற்­றம், விடி­யல் பய­ணம், முத­ல­மைச்­ச­ரின் காலை உண­வுத் திட்­டம், புது­மைப்­பெண் மற்­றும் தமிழ்ப்­பு­தல்­வன் திட்­டங்­கள், சிதை­யாத மதச்­சார்­பற்ற முற்­போக்கு கூட்­டணி பலம், தொழில் வளர்ச்சி மற்­றும் வேலை­வாய்ப்பு உரு­வாக்­கம், மாநில சுயாட்­சி­யும் ஒன்­றிய அர­சின் நிலைப்­பா­டும், நீட் தேர்­வுக்கு எதி­ரான போராட்­டங்­கள், மக்­க­ளைத் தேடி மருத்­து­வம் என்­பது ஒரு முன்­னோ­டித் திட்­டம், சமூ­க­நீதி, சிறு­பான்­மை­யி­ன­ரின் முழு­மை­யான ஆத­ரவு, ஆன்­மீ­க­மும் கோயில் நிர்­வா­கச் சீர்­தி­ருத்­தங்­க­ளும், நவீன உட்­கட்­ட­மைப்பு, நகர்ப்­புற வளர்ச்சி – என்று தனித்­தனி தலைப்­பு­கள் போட்டு திரா­விட மாடல் ஆட்­சி­யின் சாத­னை­களை விவ­ரித்­த­தும் மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் அதி­கா­ரப்­பூர்வ நாளி­தழ் தான். ஒரே மாதத்­தில் சண்­மு­கம் மனம் போன போக்­கில் எழு­து­கி­றார்.

தி.மு.க. ஆட்சி நவீன தாரா­ள­மய பொரு­ளா­தா­ரக் கொள்­கை­யைக் கடைப்­பி­டித்­த­தாம். இத­னால் மக்­க­ளுக்கு அதி­க­மான பாதிப்­பு­கள் ஏற்­பட்­ட­தாம். மக்­கள் கோபப்­பட்­டார்­க­ளாம். கேர­ளா­வில் மார்க்­சிஸ்ட் அர­சாங்­கம் கடைப்­பி­டித்­த­தும் நவீன தாரா­ள­மய பொரு­ளா­தா­ரக் கொள்கை தான். அத­னால் கோபம் அடைந்த இளை­ஞர்­கள் தான் மார்க்­சிஸ்ட் அர­சாங்­கத்தை கேர­ளா­வில் தூக்கி வீசி­னார்­களா?

கேர­ளா­வில் அதானி குழு­மத்­தின் முத­லீ­டு­களை மார்க்­சிஸ்ட் அரசு அனு­ம­தித்­தது. விழிஞ்­சம் துறை­மு­கம் அதானி கையில். கல­மச்­சேரி தள­வாட பூங்கா அதானி குழு­மத்­தால் தொடங்­கப்­பட்­டது. பிர­த­மர் மோடி­யும் – முத­ல­மைச்­சர் பின­ராயி விஜ­ய­னும் – அதா­னி­யும் ஒன்­றாக நின்று பேசிக் கொள்­ளும் படமே வெளி­யா­னது. நலி­வ­டைந்த பொதுத்­துறை நிறு­வ­னங்­களை தனி­யார் மூல­மாக மேம்­ப­டுத்­த­லாம் என்ற கேரள மார்க்­சிஸ்ட் அர­சின் நிலைப்­பாட்டை மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சியே ( மார்ச் 7,2005) ஆத­ரித்­துள்­ளது. ‘நவ கேர­ளத்­துக்­கான புதிய பாதை­கள்’ என்­பது பின­ராயி விஜ­யன் தயா­ரித்த ஆவ­ணத்தை மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்சி ஏற்­றுக் கொண்டு விட்­டது.

‘‘In a slight shift from the Communist Party of India (Marxist) [CPI(M)]’s long-held position on public sector units, the New Pathways for a Nava Keralam document presented by Chief Minister Pinarayi Vijayan, polit bureau member of the party, at the 24th State conference in Kollam, advocates restructuring of struggling PSUs under a public private partnership (PPP) model’’ ( மார்ச் 7,2025, தி இந்து)

சி.பி.எம். கட்­சி­யின் 24 ஆவது அகில இந்­திய மாநாட்டை ஒட்டி பல்­வேறு இடங்­க­ளில் கருத்­த­ரங்­கு­கள் நடத்­தப்­பட்­டது. கேரள மாநில தொழில்­துறை அமைச்­சர் பி.ராஜீவ், ‘வர்த்­தக முத­லீ­டு­க­ளும் தொழி­லா­ளர் உரி­மை­க­ளும்’ என்ற தலைப்­பில் சென்­னை­யில் 13.3.2025 அன்று சென்­னை­யில் உரை­யாற்­றி­னார். அவர் பேசி­யது சோச­லி­சமா? நவ­தா­ரா­ள­ம­யமா? என்­பதை சண்­மு­கம் பார்க்க வேண்­டும். தனது உரை­யில் பி.ராஜீவ் ஒரு மேற்­கோள் காட்­டு­கி­றார்.

‘‘என்­னு­டைய மூச்சு கம்­யூ­னி­சத்­தைக் கட்­ட­மைப்­பது தான். ஆனால் என்­னு­டைய இந்த அர­சாங்­கம் கம்­யூ­னிச சமு­தா­யத்­தைக் கட்­ட­மைப்­ப­தற்­கா­கப் பணி­யாற்­ற­வில்லை. மத்­தி­யில் ஆளும் காங்­கி­ர­சின்கொள்­கை­க­ளில் முற்­போக்­கான அம்­சங்­களை நிறை­வேற்­று­வ­தற்­கா­கவே நாங்­கள் முயற்சி செய்­கி­றோம். கட்­சி­யின் திட்­டத்தை அமல்­ப­டுத்­து­வதுஇய­லாது” என்று சொன்­ன­வர் யார் தெரி­யுமா? கேரள முத­ல­மைச்­சர் ஈ.எம்.எஸ். நம்­பூ­தி­ரி­பாத். ‘பெரு­மு­த­லா­ளி­க­ளுக்கு எதி­ராக நாங்­கள் முழக்­க­மிட்ட காலத்­தில், கேர­ளா­வில் தொழில் தொடங்­கு­வ­தற்கு பிர்­லா­வைத் தான் அழைத்து வந்­தார் ஈ.எம்.எஸ்.’ என்று தனது உரை­யில் குறிப்­பி­டு­கி­றார் மார்க்­சிஸ்ட் அமைச்­சர் பி.ராஜீவ். இந்­தக் கட்­டு­ரை­க­ளை­யும் தொகுத்து ‘பாரதி புத்­த­கா­ல­யம்’ தான் வெளி­யிட்­டுள்­ளது.

‘காவி மய­மா­கும் சிவப்பு’ – என்று ‘தின­மணி’ மகிழ்ந்து அப்­போதே தலை­யங்­கம் தீட்­டி­ய­தை­யும் மறக்க முடி­யாது. எனவே நவ தாரா­ள­ம­யம் போன்ற வார்த்­தை­களை வைத்­துக் கொண்டு கொம்பு சுற்­று­வதை சண்­மு­கம் போன்­ற­வர்­கள் குறைத்­துக் கொள்ள வேண்­டும்.

தங்­க­ளது சந்­தர்ப்­ப­வாத அர­சி­யல் நிலைப்­பா­டு­க­ளுக்கு தத்­து­வார்த்த முலாம் பூசு­வ­தைக் குறைத்­துக் கொள்ள வேண்­டும். செய­லும் செயல் தந்­தி­ர­மும் அற்ற நிலைப்­பா­டு­க­ளுக்­காக ரத்­தம் கக்­கும் வகை­யில் பேசு­வ­தை­யும் குறைத்­துக் கொள்ள வேண்­டும். இவ்வாறு முரசொலியில் ப. திருமாவேலன் எழுதி உள்ளார்.

முரசொலி புலம்பல் – திசைமாறுதா திமுக? – பதில் கட்டுரை

முன்னதாக சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் சிந்தன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் ப.திருமாவேலன் கட்டுரைக்கு பதில் கட்டுரை வெளியிட்டுள்ளார்.

சிந்தன் எழுதிய ”முரசொலி புலம்பல் – திசைமாறுதா திமுக?” என்ற தலைப்பிலான கட்டுரை: 2026 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின், கொள்கை அரசியலை முற்றாகக் கைவிடுவது என்ற முடிவுக்குத் திமுகவை இழுத்துச் செல்லும் வேலையில் சிலர் இறங்கியிருக்கிறார்கள். அதில் ஒருவர் இப்போது முரசொலி இதழில் தொடர்கட்டுரை எழுதி, சி.பி.ஐ(எம்) மாநிலச் செயலாளரைத் தனிப்பட்டு தாக்கி வருகிறார்.
திமுக – அதிமுக கூட்டணி அமையப்போகிறது என்று தேசிய ஊடகங்கள் எழுதியபோதும், யார் வேண்டுமானாலும் 118 எம்.எல்.ஏக்கள் ஆதரவைக் காட்டினால் போதும் என்று ஆளுநர் பேட்டி கொடுத்தபோதும் – அது திமுக மீதான அவதூறு என்று கொதித்தெழாத முரசொலி – இடதுசாரிகளின் மீது மட்டும் பாய்ந்து பிடுங்குவது ஏன்? காரணத்தைப் பார்ப்போம்

அம்பலமான குறுகிய அரசியல்: திமுக – அதிமுக கூட்டணி முடிவை எடுக்கவில்லை. ஆனால் அப்படி ஒரு ஆலோசனை செய்தாலே என்ன தவறு? பிரிந்த இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரே அணியில் சேரவில்லையா? என்று கேட்டார் ஆர்.எஸ்.பாரதி.

பாஜக ஆளுநரின் சித்து விளையாட்டு நடந்துகொண்டிருக்கும் பின்னணியில், சி.பி.ஐ(எம்) அவரின் தாமதத்தை அப்போதே கண்டனம் செய்திருந்தது. ஆனால் சிலர் அதைக் கண்டுகொள்ளவில்லை; திட்டமிட்ட அமைதியைக் கடைப்பிடித்தார்கள்.

தவெக என்ற புதிய கட்சியின் ஆட்சியைத் தடுக்க, வேறு எந்தவொரு கூட்டணிக் கணக்கையும் எடுக்கலாம் என்று அவர்கள் தீவிரமாகச் சிந்தித்தது காரணமாக இருக்கலாம். அதன் ஒரு பகுதியாகத்தான் மார்க்சிஸ்ட் கட்சியிடமும் அந்த ஆலோசனை பகிரப்பட்டது.

ஆளுநர் ஆசியில்லாமல் இப்படியான ஆலோசனைகள் சாத்தியமில்லை. ஆளுநரும் ரிபப்ளிக் தொலைக்காட்சிக்குக் கொடுத்த பேட்டியில், தாம் எம்.எல்.ஏ எண்ணிக்கையை எந்தத் தரப்பினர் காட்டினாலும் அவர்களை ஆட்சியமைக்க அழைப்பேன் என்று கூறினார்.

அன்றைய சூழலை சி.பி.ஐ(எம்) தனது மாநிலக் குழுவில் தீர விவாதித்து – தவெக ஆட்சியை வெளியிலிருந்து ஆதரிப்பது என்ற சரியான முடிவை, சரியான நேரத்தில் எடுத்தது.

மே 8 அன்று எடுக்கப்பட்ட முடிவுதான், திமுக – அதிமுக சேர்ந்து ஆட்சி என்ற கணக்குகளை முற்றாக முடித்துவைத்தது. ஏற்கனவே, தவெக தரப்பில் 112 எம்.எல்.ஏக்கள் என்ற ஆதரவு இருந்த பின்னணியில், இடதுசாரிகளின் முடிவு அதனை 116 ஆக மாற்றியது. இனி வேறெந்த எண்ணிக்கை விளையாட்டும் சாத்தியமில்லை என்ற நிலைமை ஏற்பட்டது.

இடதுசாரிகளின் இந்த முடிவால், திமுகவில் கொள்கைப்பிடிப்போடு இயங்கும் சிலர் நிம்மதியானார்கள் என்பதும் உண்மை. ஆனால், முரசொலி கட்டுரையாளரைப்போல மற்ற பலருக்கு குறுகிய அரசியல் நோக்கம் தோற்றுப்போனது பெரும் காயமாக மாறிவிட்டது. இப்போதுவரை வேதனை தாளாமல் துடித்துக்கொண்டிருக்கின்றனர்.

தேர்தல் வருமா வராதா?

உடனடியாகத் தேர்தலை எதிர்கொள்ளும் அபாயத்தைத் தடுக்க சி.பி.ஐ(எம்) முடிவு செய்தது உண்மையா? அது பம்மாத்து என்கிறார் திருமாவேலன்.
மே 7 அன்று திமுக சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் ///இன்னொரு தேர்தலுக்குத் தமிழ்நாடு தயாராக இல்லாத நிலையில், தமிழ்நாட்டில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதே நமது முதன்மை நோக்கம்.// என்று கூறியுள்ளதே அதுவும் பம்மாத்துதானா?
அதே தீர்மானத்தின் கடைசிப் பத்தியில், //அரசியல், நிர்வாக நிலைமைகளை ஆராய்ந்து அவசர முடிவுகளை உடனடியாக எடுக்கும் அதிகாரத்தைக் கழகத் தலைவர் திராவிட நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வழங்குவது// என முடிவு செய்தார்களே, இந்தப் புதுவகை பம்மாத்துக்கு உள்நோக்கம் என்ன?

ராமமூர்த்தி டானிக்

திராவிட கட்சிகளின் ஆட்சி என்ற இருமுனை அரசியலுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பதில் தோழர் சண்முகத்தின் மகிழ்ச்சி வெளிப்பட்டுள்ளதாக முரசொலி கூறுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலை நாம் எதிர்கொண்டதே பாஜகவோடு பம்மிப்போன ஒரு துருவத்தின் மக்கள் விரோதப் போக்கை எதிர்த்துத்தானே? அதிமுக என்ற துருவம் பலவீனமடைந்ததில் திமுகவிற்கு வருத்தமா? அந்த மகிழ்ச்சிக்குச் சண்முகம் மட்டும் சொந்தக்காரரா?
மாறிமாறி ஆட்சி செய்த திமுகவும், அதிமுகவும் திராவிட கட்சிகள் என ஒரே தட்டில் வைத்துப் பலரும் பேசும்போது, திமுகவிடம் உள்ள பல நல்ல அம்சங்கள் அதிமுகவிடம் இல்லை. அதிமுக மூடநம்பிக்கைகளில் தனது தொண்டர்களை வைத்துள்ளது என்று சொன்னாரே சண்முகம், அதைக் கட்டுரையாளர் ஏற்கிறாரா? மறுக்கிறாரா?

நீங்கள் முரசொலியில் இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில், எங்கள் கட்சி ‘தூய்மைப்பணியாளர் தனியார்மயப் போக்கை எதிர்த்து’ தீர்மானம் எழுதிக்கொண்டிருந்தது. முரசொலி இந்தக் கட்டுரையை வெளியிட்ட நாளில் நாங்கள் ஆணவக்கொலைக்கு எதிராகச் சட்ட வரைவை முன்வைத்துப் புதிய ஆட்சி அதைக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்திக்கொண்டிருந்தோம். அம்மோனியா கசிவால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்காக துடித்துக் கொண்டிருந்தோம்.

சமூகநீதி இயக்கங்களால் மறக்கப்பட்ட மக்கள் திரளையும் உள்ளடக்கி செயல்பட, எந்த அடக்குமுறை வந்தாலும் எதிர்த்து நீதிக்கு போராட – எங்களை உயிர்ப்போடு வைத்திருப்பதுதான் ‘பி.ராமமூர்த்தியின் டானிக்’. எனவே, அந்த டானிக் முரசொலிக்கு ஏன் அலர்ஜியாகிறது? என்பதே கேள்வி.

வாச்சாத்தி நாயகர்களின் உறுதி!

வாச்சாத்தியில் நடைபெற்ற மிகப்பெரும் அரசு வன்முறைத் தாண்டவத்திற்கு எதிராக விடாப்பிடியாகப் போராடி நீதியை நிலைநாட்டிய இயக்கம் செங்கொடி இயக்கம்.

தவெக ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவளித்த உடனே, வாச்சாத்தியின் உறுதியான தியாக வரலாற்றை முன்வைத்து, அதைக்கொண்டே தோழர் சண்முகத்தைத் தாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் கட்டுரையாளர். இதுவெல்லாம் எத்தனை தரமற்ற செயல்கள் என்பதை மக்கள் தெளிவாக அறிவார்கள்.
வாச்சாத்தி கொடூரம் நடந்து, நீதிக்காகப் போராடிய 30 ஆண்டுகளில் பல்வேறு ஆட்சிகளையும் பல்வேறு கூட்டணிகளையும் தமிழ்நாடு பார்த்துள்ளது. அரசியல் சூழல் எப்படி மாறியபோதும், செங்கொடியின் உறுதியான போராட்டம்தான் அந்த வெற்றியைச் சாதித்தது.

இந்தக் கேள்விக்கு உங்கள் பாணியிலேயே ஒரு பதில் சொல்லலாம்.
தவெக ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு என்றில்லாமல், அதிமுக ஆட்சிக்கு ஆதரவு என்ற ஆலோசனையை ஒருவேளை மார்க்சிஸ்டுகள் ஏற்றிருந்தால் என்ன நடந்திருக்கும்? தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக் கால முதலமைச்சருக்கு மீண்டும் அதிகாரம் கிடைத்திருக்கும்.. அதைத்தான் திமுக விரும்பியதா? வாச்சாத்தி கொடூரங்களைப் போல ஏராளமான போலீஸ் எல்லை மீறல்களை எதிர்த்த வரலாறும், வென்ற சரித்திரமும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு உண்டு. அதிகாரம் எங்களை ஊசலாட வைத்ததில்லை.
அருணா ஜகதீசன் அறிக்கைப்படி, போலீசார் மீது நடவடிக்கை வேண்டும் என்று கோரினோமே, திமுகவிடம் வானளாவிய அதிகாரங்கள் இருந்தபோதும், நடவடிக்கையைத் தடுத்தது எது?. தேர்தலுக்கு பிறகாவது இந்த அம்சங்களில் திமுகவிற்குத்தான் மறு சிந்தனை தேவை.

திசைமாற்றம் நோக்கி இழுப்பது யார்?

தவெக ஆட்சியில், அமைச்சரவையில் சேரும்படி பலமுறை கோரியபோதும் – மக்கள் முடிவின்படியும், மார்க்சிஸ்ட் கட்சியின் கொள்கை நிலைப்பாட்டின்படியும் எதிர்க்கட்சியாகத் தொடர்வோம் என்ற முடிவை சி.பி.ஐ(எம்) எடுத்துள்ளது. வெளியிலிருந்து ஆதரவு என்ற ‘சுயேட்சையான முடிவுக்கு’ யாரும் சொந்தம் கொண்டாட முடியாது.

இப்படியான புதிய அரசியல் சூழலில் எதிர்க்கட்சி வரிசையில் திமுக – இடதுசாரிகள் – அதிமுக – பாஜக – பாமக ஆகிய கட்சிகள் உள்ளன. ஒவ்வொரு கட்சிக்கும் அணுகுமுறை மாறுவது இயல்பு. புதிய‌ நிலைமையை திமுகவில் சிலரால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை.

தவெக ஆட்சியில் தவறு நடக்கும்போதெல்லாம் எதிர்க்கட்சிகளின் குரல் ஒலிக்க வேண்டும். சி.பி.ஐ(எம்) அதில் உறுதியாக இருக்கிறது. சாம்சங் போராட்டத்திலும், வேலை நேர அதிகரிப்புப் பிரச்சனையிலும், பழைய பென்சன் திட்டம், நிரந்தரமற்ற பணியாளர்களின் வேலை நிரந்தரம், தூய்மைப் பணியாளர் போராட்டம், மாற்றுத்திறனாளிகள் உரிமை என பல பிரச்சனைகளில் – தம் ஆட்சிக் காலத்திலேயே இடதுசாரிகளின் எதிர்ப்பை அறிந்த திமுகவிற்கு இது சந்தேகமில்லாமல் தெரியும்.

ஆனாலும், சி.பி.ஐ(எம்) நோக்கிய பாய்ச்சல் ஏன்?. சில சக்திகள் திமுகவிற்குள் இருந்துகொண்டு, அதிகாரப்பூர்வ ஏட்டைப் பயன்படுத்தி சி.பி.ஐ(எம்) மீது அவதூறு செய்வது ஏன். இடதுசாரிகளிடமிருந்து விலகினால்தான், வலது பக்கம் சாய முடியும் என்ற உத்தி அதில் வெளிப்படுகிறதா? இந்தக் கேள்விதான் எழுகிறது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share