அமெரிக்காவில் உள்ள வால்மார்ட் வணிக வளாகத்தை ஒரு சிறிய விமானம் மூலம் தகர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவில் அல்கொய்தா தீவிரவாதிகள் நடத்திய இரட்டைக்கோபுர தாக்குதல், உலக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதில் பலர் இறந்த நிலையில், ஏறத்தாழ 20 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது அங்கு மீண்டும் அத்தகையதொரு முயற்சி நடைபெற்றுள்ளது.
அமெரிக்காவில் மிஸிசிப்பி மாகாணத்தில் உள்ள டியுபுலோ வால்மார்ட் வணிக வளாக கட்டிடத்தை தகர்க்கப்போவதாக சிறிய ரக விமானத்தை திருடிய விமானி ஒருவர் இந்திய நேரப்படி இன்று (செப்டம்பர் 3) மதியம் 2 மணி முதல் தொடர்ந்து மிரட்டி உள்ளார்.
இதனையடுத்து வளாகத்தைச் சுற்றி தொடர்ந்து வட்டமடித்து கொண்டே வந்ததால் ஆயிரக்கணக்கான வால்மார்ட் ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். மேலும் வளாகத்தை சுற்றி இருக்கும் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று மிஸிசிப்பி போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனையடுத்து தொடர்ந்து விமானத்தில் பறந்து கொண்டிருக்கும் ஊழியருடன் அமெரிக்க போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் வளாகத்தை சுற்றி ஏராளமான போலீஸ் வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் குவிக்கப்பட்டுள்ளன.
கிறிஸ்டோபர் ஜெமா
உயிர்பலி வாங்கும் மிக் 21… ‘டாட்டா’ காட்ட தயாராகும் இந்தியா!