VIDEO: பெங்களூருவில் விஜய்- டி.கே. சிவகுமார் ஆகஸ்ட் 3-ல் பேச்சுவார்த்தை: ஏற்பாடுகள் மும்முரம்!

Published On:

| By Mathi

Cauvery Issue: Karnataka CM Refuses to release CM Vijay's Letter

காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாக கர்நாடகா முதல்வர் டி.கே. சிவகுமாருடன் தமிழக முதல்வர் ஆகஸ்ட் 3-ந் தேதி பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதற்கான ஏற்பாடுகளை முழுவீச்சில் கர்நாடகா அரசு மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாட்டுக்கு காவிரியில் 3,500 கன அடிநீரை கர்நாடகா உடனே திறந்துவிட உத்தரவிட்டுள்ளது காவிரி ஒழுங்காற்று குழு. காவிரி மேலாண்மை வாரியமும் இதே உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

ADVERTISEMENT

ஆனால் கர்நாடகாவோ, வறட்சி நிலவுவதால் தமிழ்நாட்டுக்கு நீர் திறந்துவிட முடியாது என்பதில் பிடிவாதமாக இருக்கிறது.

இந்நிலையில் தமிழக முதல்வர் விஜய், கர்நாடகா முதல்வர் டி.கே. சிவகுமாருக்கு கடிதம் அனுப்பி இருந்தார். அதில், பேச்சுவார்த்தைக்கு தாம் கர்நாடகா வர தயார் எனவும் முதல்வர் விஜய் கூறியிருந்தார். இதனை ஏற்று ஆகஸ்ட் 3-ந் தேதி முதல்வர் விஜய்யை பெங்களூரு பேச்சுவார்த்தைக்கு வருகை தருமாறு கர்நாடகா முதல்வர் டி.கே. சிவகுமார் அழைப்பு விடுத்தார்.

ADVERTISEMENT

அதேநேரத்தில் முதல்வர் விஜய்யின் கர்நாடகா பயணம் தொடர்பாக தமிழக அரசு தரப்பில் உறுதியான தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தமிழக அமைச்சர்கள் முரண்பாடான தகவல்களை தெரிவித்தும் வருகின்றனர்.

விஜய்க்கு (VIJAY) ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்கிறோம்

இந்நிலையில் டெல்லியில் இன்று ஜூலை 29-ந் தேதி செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா முதல்வர் டி.கே.சிவகுமார், தமிழக முதல்வர் ’விஜய்தான்’ பேச்சுவார்த்தை குறித்து கடிதம் அனுப்பினார். அவர் கர்நாடகா வரும் போது எங்களது காவிரி படுகைகளை சுற்றிப் பார்க்க ஹெலிகாப்டர் வசதி செய்து தருகிறோம். எங்களது வறட்சியை அவர் கண்ணால் பார்க்கட்டும் என கூறியிருந்தார்.

ADVERTISEMENT

பெங்களூருவில் ஏற்பாடுகள் மும்முரம்

இதனிடையே கர்நாடகா சட்டசபையின் மாநாட்டு மண்டபத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல்வர் விஜய்- கர்நாடகா முதல்வர் டி.கே. சிவகுமார் இடையேயான காவிரி பேச்சுவார்த்தை இந்த மாநாட்டு மண்டபத்தில்தான் நடைபெற இருப்பதால் சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெறுவதாக கர்நாடகா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share