பிடர் கொண்ட சிங்கமே பேசு… கலைஞர் முன் வைரமுத்து நெகிழ்ச்சி வீடியோ!

Published On:

| By christopher

முன்னாள் முதல்வர் கலைஞரின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் கவிஞர் வைரமுத்து, அவர் குறித்து தான் வாசித்த கவிதை வீடியோவை பகிர்ந்துள்ளார்.

முன்னாள் திமுக தலைவரும், முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவுதினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் பிரபலங்கள் பலரும் அவருக்கு நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கவிஞர் வைரமுத்து கடந்த 2018ம் ஆண்டு கலைஞரை நேரில் சந்தித்து அவர் முன் தான் கவிதை வாசித்த வீடியோவை தற்போது நினைவஞ்சலியாக பகிர்ந்துள்ளார். வைரமுத்து கவிதை வாசிக்க கலைஞர் ரசித்தபடி அதனை கேட்கும் வீடியோ குறித்து பலரும் நெகிழ்ந்து வருகின்றனர்.

ADVERTISEMENT

அந்த கவிதையானது,

பிடர் கொண்ட சிங்கமே பேசு

ADVERTISEMENT

இடர்கொண்ட தமிழ்நாட்டின்

இன்னல்கள் தீருதற்கும்

ADVERTISEMENT

படர்கின்ற பழைமை வாதம்

பசையற்றுப் போவதற்கும்

சுடர் கொண்ட தமிழைக் கொண்டு

சூள் கொண்ட கருத்துரைக்கப்

பிடர் கொண்ட சிங்கமே

நீ பேசுவாய் வாய் திறந்து

யாதொன்றும் கேட்கமாட்டேன்

யாழிசை கேட்கமாட்டேன்

வேதங்கள் கேட்கமாட்டேன்

வேய்க்குழல் கேட்கமாட்டேன்

தீதொன்று தமிழுக் கென்றால்

தீக்கனல் போலெழும்பும்

கோதற்ற கலைஞரே

நின்குரல் மட்டும் கேட்க வேண்டும்

இடர்கொண்ட தமிழர் நாட்டின்

இன்னல்கள் தீருதற்கும்

படர்கின்ற பழைமை வாதம்

பசையற்றுப் போவதற்கும்

சுடர் கொண்ட தமிழைக் கொண்டு

சூள் கொண்ட கருத்துரைக்கப்

பிடர் கொண்ட சிங்கமே

நீ பேசுவாய் வாய் திறந்து.. என்று விவரிக்கப்படுகிறது.

கிறிஸ்டோபர் ஜெமா

சிறப்புக் கட்டுரை: நவீன சென்னையை வடிவமைத்த கலைஞர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share