ரூ.9,450 கோடி.. தமிழ்நாடு உட்பட 4 மாநிலங்களின் 4 ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Published On:

| By Mathi

Union Cabinet Approves Rs 9,450 Crore Railway Projects for 4 States Including Tamil Nadu

தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் மாநிலங்களில் ரூ.9,450 கோடி மதிப்பிலான 4 ரயில்வே திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு நேற்று (ஆகஸ்ட் 19) ஒப்புதல் அளித்துள்ளது.

  • கும்மிடிப்பூண்டி-கூடூர் 3-வது, 4-வது வழித்தடம்-90 கிலோ மீட்டர் (ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு)
  • காரக்பூர்-பத்ராக் (ராணிடால்) 4-வது வழித்தடம்-173 கிலோ மீட்டர் (மேற்கு வங்கம், ஒடிசா)
  • பத்ராக்-ஹரிதாஸ்பூர் 4-வது வழித்தடம்-75 கிலோ மீட்டர் (ஒடிசா)
  • கட்டாக்-பாரதீப் (படபந்தா) 3-வது, 4-வது வழித்தடம்-72 கிலோ மீட்டர் (ஒடிசா) ஆகிய இந்தத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டங்களை 2030-31-ம் ஆண்டிற்குள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேற்கு வங்கம், ஒடிசா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் 8 மாவட்டங்களை உள்ளடக்கி செயல்படுத்தப்படவுள்ள இந்த 4 திட்டங்களால் இந்திய ரயில்வேயின் தற்போதைய கட்டமைப்பு சுமார் 410 கிலோ மீட்டர் வரை அதிகரிக்கும். இந்தப் பல்தடத் திட்டங்கள் சுமார் 60 லட்சம் பேர் வசிக்கும் 6,448 கிராமங்களுக்கு போக்குவரத்து வசதியை மேம்படுத்தும்.

இத்திட்டங்களால்

ADVERTISEMENT
  • குல்திஹா வனவிலங்கு சரணாலயம்
  • பிட்டார்கனிகா தேசியப் பூங்கா
  • மா பத்ரக்காளி கோவில்
  • மா தமாரைக் கோவில்
  • பஞ்சலிங்கேஸ்வர் கோவில்
  • தல்சாரி-உதய்பூர்
  • சந்திப்பூர் கடற்கரை
  • பழவேற்காடு ஏரி
  • நெலப்பட்டு பறவைகள் சரணாலயம்
  • பகவான் வீரராகவ பெருமாள் கோவில்
  • கடா குஜங்கா ஜகன்நாதர் கோவில்
  • சரளா கோவில்
  • தபாலேஸ்வர் கோவில்
  • லலித்கிரி (புத்த தலம்) உள்ளிட்ட நாட்டின் பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு ரயில் போக்குவரத்து வசதி மேம்படும்.
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share