“நாளைய பொழுது நமக்காய் விடியும்”.. என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் தெரிவித்துள்ளார்.
விஜய் கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு தருவதா? என்பது தொடர்பாக விசிகவின் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து விசிக பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
தமிழ்நாடு குழம்பிப் போயிருக்கலாம்.
எழுச்சித்தமிழர் தெளிந்த நீரோடை.
உளிகளை கொண்டு செதுக்க
அவர் வெறும் கல் அல்ல.
எழுந்து நிற்கும் இமய மலை.
நாளைய பொழுது
நமக்காய் விடியும். இவ்வாறு சிந்தனை செல்வன் கூறியுள்ளார்.
முன்னதாக சிந்தனை செல்வன் வெளியிட்ட அறிக்கையில், விஜய்யை கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
