தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் கரூர் உட்பட 4 மாவட்டங்களில் 90%க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி உள்ளன. இவற்றுடன் மொத்தம் 33 மாவட்டங்களில் 80%-க்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி உள்ளன.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று ஏப்ரல் 23-ந் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெற்றது.
இந்த தேர்தலில் மொத்தம் 85.10 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
33 மாவட்டங்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகள் பதிவாகி உள்ளன. இதில் கரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின.
80%-க்கும் அதிகமான வாக்குகள் பதிவு விவரம்:
- கரூர் – 92.64%
- சேலம் – 90.73%
- தருமபுரி – 90.14%
- நாமக்கல் – 90.13%
- ஈரோடு – 90.10%
- ராணிப்பேட்டை – 89.869%
- திருவண்ணாமலை – 89.46%
- விழுப்புரம் – 88.99%
- திருப்பத்தூர் – 88.96%
- திண்டுக்கல் – 89.06%
- வேலூர் – 88.76%
- திருப்பூர் – 88.59%
- கள்ளக்குறிச்சி – 88.25%
- அரியலூர் – 87.40%
- காஞ்சிபுரம் – 87.39%
- நாகை – 86.30%
- பெரம்பலூர் – 85.50%
- கடலூர் – 85.49%
- திருச்சி – 85.44%
- கிருஷ்ணகிரி – 85.29%
- செங்கல்பட்டு – 85.29%
- விருதுநகர் – 84.90%
- கோவை – 84.79%
- புதுக்கோட்டை – 83.89%
- திருவாரூர் – 83.77%
- திருவள்ளூர் – 83.76%
- சென்னை – 83.73%
- தென்காசி – 82.40%
- மயிலாடுதுறை – 82.14%
- தேனி – 81.92%
- தஞ்சாவூர் – 80.61%
- மதுரை – 80.55%
- தூத்துக்குடி – 80.55%
குறைவான வாக்குப் பதிவு மாவட்டங்கள்
- நீலகிரி – 78.95%
- திருநெல்வேலி – 77.93%
- ராமநாதபுரம் – 77.03%
- சிவகங்கை – 76.61%
- கன்னியாகுமரி – 75.61%
