2026-ஐ இறைவனின் காலடியில் தொடங்குவோம்! – ஆட்டம் வேண்டாம்… அமைதி போதும்! ஆன்மீக வழியில் புத்தாண்டு!

Published On:

| By Santhosh Raj Saravanan

spiritual new year celebration temple visit meditation ideas 2026

“ஆரம்பமே அமர்க்களமா இருக்கணும்” என்று பலர் நினைப்பார்கள். அதற்காகக் குடித்துவிட்டு ஆடுவதும், வீதி முழுக்கக் கத்துவதும் தான் அமர்க்களமா? நிச்சயம் இல்லை. “ஆரம்பம் அமைதியாகவும், மங்களகரமாகவும் இருக்க வேண்டும்” என்று நினைப்பவர்களுக்கான பதிவு இது.

கூச்சல், குழப்பம், போதை இல்லாத ஒரு சாத்வீகமான புத்தாண்டைக் கொண்டாடுவது எப்படி?

ADVERTISEMENT

1. நள்ளிரவு கோவில் தரிசனம்: டிசம்பர் 31 இரவு 12 மணிக்கு, பெரும்பாலான முக்கிய கோவில்களில் நடை திறக்கப்பட்டுச் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இறைவனின் சந்நிதியில், கற்பூர ஜோதியின் வெளிச்சத்தில் புத்தாண்டைத் தொடங்குவது மனதிற்குப் பெரிய நிம்மதியைத் தரும்.

  • டிப்ஸ்: பிரபலமான பெரிய கோவில்களில் கூட்டம் அலைமோதும். நெரிசலில் சிக்கி டென்ஷன் ஆவதை விட, உங்கள் தெருமுனையில் இருக்கும் விநாயகர் கோவிலோ அல்லது சிறிய ஆலயங்களோ சிறந்த தேர்வு. அங்கு அமைதியாக அமர்ந்து 10 நிமிடம் பிரார்த்தனை செய்யலாம்.

2. தியானம் (Meditation) – ஒரு புதிய ஆரம்பம்: கோவிலுக்குச் செல்ல முடியாவிட்டாலும் பரவாயில்லை. வீட்டிலேயே ஒரு அமைதியான இடத்தை தேர்வு செய்யுங்கள். நள்ளிரவு 11:45 மணியிலிருந்து 12:15 மணி வரை தியானத்தில் ஈடுபடுங்கள்.

ADVERTISEMENT
  • சங்கல்பம்: “கடந்த கால கசப்புகள், தோல்விகள் எல்லாம் 2025வோடு போகட்டும். 2026 புதிய நம்பிக்கையையும், ஆரோக்கியத்தையும் தரட்டும்” என்று மனதிற்குள் உறுதியான சங்கல்பம் (Resolution) எடுத்துக்கொள்ளுங்கள். ஈஷா யோகா, வாழும் கலை போன்ற அமைப்புகள் நள்ளிரவு சத்சங்கங்களை ஆன்லைனிலும் நடத்துகின்றன; அதில் இணைந்தும் தியானிக்கலாம்.

3. நன்றி நவிலல் (Gratitude Prayer): கடவுள் நம்பிக்கை உள்ளவரோ, இல்லாதவரோ… யாராக இருந்தாலும் ‘நன்றி’ சொல்வது ஒரு உயர்வான ஆன்மீகப் பண்பு. ஒரு பேப்பரை எடுத்து, கடந்த வருடம் உங்களுக்கு உதவிய மனிதர்கள், கிடைத்த நல்ல விஷயங்களை எழுதுங்கள். பிரபஞ்சத்திற்கு நன்றி சொல்லுங்கள். நன்றி உணர்வு நேர்மறை ஆற்றலை (Positive Energy) ஈர்க்கும் வல்லமை கொண்டது.

4. இல்லறமே நல்லறம்: வெளியே செல்ல விருப்பமில்லையா? நள்ளிரவு 12 மணிக்கு வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி, குடும்பத்தோடு அமர்ந்து கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள். தேவாரம், திருவாசகம் அல்லது உங்களுக்குப் பிடித்த பக்திப் பாடல்களை ஒலிக்க விடுங்கள். அந்த தெய்வீக அதிர்வுகள் (Vibrations) வீடு முழுவதும் நிரம்பும்.

ADVERTISEMENT

வருடம் முழுவதும் ஓடிக்கொண்டே இருக்கிறோம். இந்த ஒரு கணமாவது நின்று, நிதானித்து, அந்தப் பரம்பொருளிடம் நம் பாரத்தை இறக்கி வைப்போம். நல்ல எண்ணங்களோடு,த் தெளிவான மனதோடு தொடங்கும் எதுவும் வெற்றியில்தான் முடியும்.

அனைவருக்கும் இனிய ஆன்மீகப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share