கலைஞர் கோரிக்கை வைத்ததால் தான் தமிழகத்தில் தொழில் துவங்கினோம் என்று எச்.சி.எல் நிறுவனர் ஷிவ் நாடார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக எச்.சி.எல் குழும நிறுவனர் ஷிவ் நாடார், எச்.சி.எல் குழும தலைவர் ரோஷினி நாடார் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஷிவ் நாடார் பேசும்போது, “கலைஞரை எனக்கு நன்றாக தெரியும். அவரை ஐந்து முறை சந்தித்து பேசியுள்ளேன். வசீகரமான பேச்சாளர். நீங்க டெல்லிக்கு போய்ட்டீங்க தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லையா என்று கேட்டார். அதன்பிறகு தான் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் எச்.சி.எல் அலுவலகத்தை துவங்கினோம். நூலகத்தில் கலைஞர் எழுதிய புத்தகங்கள் நிறைய உள்ளது” என்று தெரிவித்தார்.
செல்வம்
“தமிழகத்தில் கல்வி புரட்சியை ஏற்படுத்தியது திமுக” – முதல்வர் ஸ்டாலின்
’இங்க நான் தான் கிங்’: ஜெயிலர் படத்தின் இரண்டாம் ப்ரோமோ வெளியானது!
