மத்திய பணியில் இருந்து திரும்பிய ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ்-க்கு முக்கிய பொறுப்பு!

Published On:

| By Kavi

தமிழ்நாடு நில நிர்வாக ஆணையராக ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தலைமை செயலாளர் சாய் குமார் இன்று (ஜூலை 24) பிறப்பித்துள்ள உத்தரவில், ”ஐஏஎஸ் விதிகள் 1954, விதி 4(2)-ன் கீழ், நில நிர்வாக கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையர் என்ற தற்காலிகப் பதவி ஒரு வருட காலத்திற்கு (அல்லது தேவை முடியும் வரை) உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மத்திய அரசு பணியில் இருந்து தமிழ்நாடு பணிக்கு திரும்பியுள்ள ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ் புதிதாக உருவாக்கப்பட்ட நில நிர்வாக கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையர் பதவியில் நியமிக்கப்படுகிறார்” என்று கூறப்பட்டுள்ளது/ 

மேலும் அதில்,  ”ஓராண்டுக்கு உருவாக்கப்பட்டுள்ள இப்பதவியை, தலைமைச் செயலாளர் கேடர் பதவிக்கு இணையானதாக அரசு அறிவிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

கடந்த 1992ம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான ராஜேஷ் லக்கானி, கடந்த பிப்ரவரியில், தமிழக அரசு பணியில் இருந்து மத்திய அரசு பணிக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share