தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்க ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர்- , வழக்கறிஞரான எழிலரசி மற்றும் முன்னாள் ஐஜி ராமசுப்பிரமணி ஆகியோர் இந்த மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுக்களில்
- 234 இடங்களைக் கொண்ட தமிழகச் சட்டசபையில் 108 இடங்களைப் பெற்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
- காங்கிரஸின் 5 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவோடு அக்கட்சியின் பலம் 113 ஆக உள்ளது.
- அரசியலமைப்புச் சட்டத்தின்படி தனிப்பெரும் கட்சியின் தலைவரையே ஆளுநர் முதலில் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்.
- ஒரு கட்சிக்குத் தேவையான பெரும்பான்மை இருக்கிறதா இல்லையா என்பதை ஆளுநர் மாளிகையில் முடிவு செய்யக்கூடாது. அதை சட்டசபையில்தான் நிரூபிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் உறுதிப்படுத்தி உள்ளன
- ஆகையால் விஜய்யை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க ஆளுநர் அர்லேகருக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
