பழனி ரூ.100 கோடி நில மோசடி: திண்டுக்கல் மாவட்ட பதிவாளர் சஸ்பெண்ட்!

Published On:

| By Mathi

Palani ₹100 Crore Land Scam: Dindigul District Registrar Suspended

பழனியில் ரூ.100 கோடி நில மோசடி விவகாரத்தில் திண்டுக்கல் மாவட்ட பதிவாளர் சசிகலா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

பழனி அடிவாரத்தில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலம், நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிராக கடந்த ஜூலை 6-ம் தேதி முறைகேடாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலம் பக்தர்களுக்கான வாகன நிறுத்துமிடமாக (Parking lot) பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், வெள்ளத்துரை மற்றும் சேதுபதி ஆகிய இருவர் பெயரில், போலி ஆவணங்கள் மூலம் ரூ.2 கோடிக்குத் தடையற்ற விற்பனைப் பத்திரமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முறைகேடாகப் பத்திரப் பதிவு செய்த, கூடுதல் பொறுப்பில் இருந்த பழனி சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

ADVERTISEMENT

ஜஸ்டின் மணிகண்டன், வெள்ளத்துரை, சேதுபதி, முருகதாஸ் உள்ளிட்டோர் மீது பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையை தமிழக அரசு சிபி-சிஐடி (CB-CID) பிரிவுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனிடையே இந்த நிலத்தின் பத்திரப் பதிவை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நேற்று ரத்து செய்திருந்தது.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் திண்டுக்கல் மாவட்ட பத்திரப் பதிவு துறை பதிவாளர் சசிகலா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share