இரவிலும் தொடர் மின்வெட்டு.. விடிய விடிய நடுரோட்டில் கொந்தளித்த மக்கள்! மின்வாரிய அலுவலகங்கள் முற்றுகை!

Published On:

| By Mathi

Midnight Blackouts Trigger Mass Outrage

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர் மின்வெட்டைக் கண்டித்து (Midnight Blackouts) நள்ளிரவிலும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்; மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிட்டனர்.

  • கொளத்தூர் தொகுதி பாபா நகர், 200 அடி சாலை பகுதிகளில் நள்ளிரவில் கடுமையான மின்தடை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டும், செந்தில்நகர் போலீஸ் பூத் அருகே சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
  • திருவொற்றியூர் விம்கோ நகர், பாரத் நகர் பகுதிகளில் தொடர் மின்வெட்டு குறித்து சரியான பதில் தராத மின்வாரிய ஊழியர்களைக் கண்டித்து அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
  • தண்டையார்ப்பேட்டை ராயபுரம், ஏழுகிணறு, காசிமேடு, வண்ணாரப்பேட்டை, ஆர்.கே. நகர், கொருக்குப்பேட்டை ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டது.
  • முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதியில் மகாகவி பாரதிநகர், சாஸ்திரி நகர் உள்ளிட்ட இடங்களில் 2 நாட்களாக இரவு நேர மின்தடை நீடித்தது. இதனால் சர்மா நகர் – எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
  • எம்.எம்.டி.ஏ. காலனி, அபிராமி நகர் பகுதிகளில் இரவு 9.30 மணிக்கு மேல் மின்வெட்டு ஏற்பட்டதைக் கண்டித்து மின்வாரிய அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டனர்.
  • புத்தாகரம், லட்சுமிபுரம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பகுதிகளில் 7 மணி நேரம் தொடர் மின்வெட்டைக் கண்டித்து கடப்பா சாலையில் பொதுமக்கள் மறியல் செய்தனர்.
  • செங்குன்றம், சோழவரம், பாடியநல்லூர் பகுதிகளிலும் மின்தடை நீடித்தது.
  • துரைப்பாக்கம், ஆலந்தூர் முகலிவாக்கம் பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டது. ஆலந்தூரில் 5 முதல் 6 முறை மின்சாரத் தடை ஏற்பட்டது.
  • பட்டாபிராமில் டிரான்ஸ்பார்மர் பழுதடைந்ததால் சுமார் 17 மணி நேரம் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.
  • திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டது.
  • காஞ்சிபுரம் வாலாஜாபாத்தில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் வாலாஜாபாத் – தாம்பரம் சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
  • கடம்பத்தூர் பகுதியில் இரவு நேரங்களில் பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் திருவள்ளூர் – சுங்குவார்சத்திரம் நெடுஞ்சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தினர். இதேபோல பல இடங்களில் மின்வெட்டைக் கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share