அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 17 சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவை செயலாளர் மற்றும் தற்காலிக சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர்
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக 47 இடங்களில் வெற்றி பெற்று மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக 11 தேர்தல்களில் தோல்வியை சந்தித்துள்ளது.
இதனால் பெரும்பாலான அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம். எல்.ஏ. க்கள் எடப்பாடி மீது அதிருப்தியில் இருக்கின்றனர்.
இந்தசூழலில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி. வி.சண்முகம் வீட்டில் எஸ் பி வேலுமணி சி.விஜயபாஸ்கர் ஆகியோர் ஆலோசனை செய்தனர்.
இதையொட்டி அதிமுக இரண்டாக உடைகிறது என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், இன்று வெறும் 17 எம். எல். ஏ. க்கள் மட்டும் எடப்பாடிக்கு ஆதரவாக கடிதம் கொடுத்துள்ளனர்.
அதில், அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி செயல்படுவார் என கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே சி. வி. சண்முகம் சட்டப்பேரவையில் பதவி கூட ஏற்காமல் பாதியிலேயே புறப்பட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
