ஜாபர் சாதிக்கிற்கு ஜாமீன்… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published On:

| By Selvam

போதைப்பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கிற்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 21) ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. grants bail Jaffer Sadiq

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் கடந்த மார்ச் மாதம் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இதன்பிறகு இவர் மீது அமலாக்கத்துறையும் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தது. அவரது சகோதரர் முகமது சலீமும் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், இருவரும் ஜாமீன் கேட்டு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுத்தாக்கல் செய்தனர். இந்த ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி எழில் வேலன், ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் சலீம் ஆகியோருக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி இரண்டு மனுக்களையும் தள்ளுபடி செய்தார்.

இந்தநிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக், சலீம் ஆகியோர் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு நீதிபதி சுந்தர் மோகன் முன்பாக விசாரணை நடைபெற்று வந்தது.

அமலாக்கத்துறை தரப்பில், “ஜாபர் சாதிக் திமுக முன்னாள் நிர்வாகி என்பதால், சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதால் இருவருக்கும் ஜாமீன் வழங்கக்கூடாது” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. ஆனால், இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதி, மணிஷ் சிசோடியாவின் ஜாமீன் தீர்ப்பை முன் உதாரணமாக வைத்துக்கொண்டு ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் சலீம் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். grants bail Jaffer Sadiq

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share