இனி டீசலையும் மக்களே தயாரிக்க வேண்டுமா? – மாகாபா ஆனந்த் காட்டம்

Published On:

| By Pandeeswari Gurusamy

தண்ணீர் கலந்த டீசல் போட்டதால் தனது கார் பழுதடைந்த நிலையில் ஆத்திரம் அடைந்த மாகாபா ஆனந்த் இனி டீசலையும் மக்களே தயாரிக்க வேண்டுமா என காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழ்த் திரைப்பட நடிகராகவும், பண்பலைத் தொகுப்பாளராகவும், தொலைக்காட்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றி வருபவர் மாகாபா ஆனந்த்.

ADVERTISEMENT

இவர் தனது காருக்கு பிரபல பங்கில் வழக்கம் போல் டீசல் போட்டுள்ளார். ஆனால் டீசலில் தண்ணீர் கலந்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது சொகுசு கார் பழுதடைந்தது. இதைத்தொடர்ந்து மாகாபா ஆனந்த் தனது காருக்கு ரூ.3 லட்சம் வரை செலவு செய்யும் நிலை ஏற்பட்டதாக ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

தண்ணீர் கலந்த டீசல் போடப்பட்டதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. ஆனால் ஆதாரத்தோடு நிரூபித்ததும், கோர்ட்க்கு போய் விட வேண்டாம் என கூறி ரூ.80,000 வழங்குவதாக பெட்ரோல் பங்க் நிர்வாகத்தினர் பேரம் பேசுகிறார்கள்.

ADVERTISEMENT

உங்களை நம்பித்தானே பெட்ரோல் டீசல் போட வருகிறோம். ஆனால் இப்படி செய்தால் இனி டீசலையும் மக்களே தயாரிக்க வேண்டுமா? இந்த பெட்ரோல் பங்க் மேல் இருந்த நம்பிக்கையே போய் விட்டது என்று அவர் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share