தாம் அரசியலில் ”கிங் மேக்கர் (King Maker) இல்லை.. தாமே வெற்றி பெறுவேன்” என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

NDTV ஆசிரியர் குழுவுடனான உரையாடலில் விஜய் தெரிவித்த கருத்துகள்:
– 41 பேர் பலியான கரூர் துயர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கனவிலும் நினைத்து கூட பார்க்க முடியாத இந்த பெருந்துயரம் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது.
– ஜனநாயகன் படம் வெளியாகாமல் போனதால் தயாரிப்பாளருக்கு பாதிப்பு. நான் அரசியலுக்கு வந்ததால், என் திரைப்படத்தை குறிவைத்துள்ளனர்.
– எம்ஜிஆர், ஜெயலலிதா என்னுடைய ரோல் மாடல். நான் ஷாருக்கானின் தீவிர ரசிகர்.
– நான் தேர்தலில் வெற்றி பெறுவேன்; நான் கிங் மேக்கர் இல்லை.
– பல ஆண்டுகளாக திரைத்துறையில் ஸ்டாராக இருந்துவிட்டு இப்போது அரசியலில் கவனம் செலுத்துவது அவ்வளவு எளிதாக இல்லை.
– தேர்தல் ஆணையம் நாங்கள் கேட்ட விசில் சின்னத்தை எங்களுக்கு ஒதுக்கியது முதல் வெற்றி. எங்களது தேர்தல் வெற்றியை முன்கூட்டியே சொல்லக் கூடிய தெய்வீக அசரீரியாகவே நினைக்கிறேன்.
– என்னுடைய அரசியல் பயணம் ஒரு தேர்தலுடன் முடிவடையாது. என் அரசியல் பயணம் நீண்டகாலத்துக்கானதாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.
– இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் என் இலக்கு.
