மதுரை, சிவகங்கை மாவட்ட ஆட்சியர்கள் உட்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!

Published On:

| By Mathi

IAS Officers Transferred Including District Collectors of Madurai and Sivaganga

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர்கள் உட்பட ஐஏஎஸ் அதிகாரிகள் (IAS Officers) மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் விவரம்:

  • டி. பிரபுசங்கர் (மேலாண்மை இயக்குநர், மாநகர போக்குவரத்து கழகம்) – இயக்குநர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை
  • வி.பி. ஜெயசீலன் (இணை ஆணையர் (சுகாதாரம்), பெருநகர சென்னை மாநகராட்சி) – இயக்குநர், சுற்றுலாத்துறை மற்றும் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம்
  • பி. ஆகாஷ் (மாவட்ட ஆட்சியர், மதுரை) – மாவட்ட ஆட்சியர், சிவகங்கை
  • நிஷாந்த் கிருஷ்ணா (மாவட்ட ஆட்சியர், சிவகங்கை) – மாவட்ட ஆட்சியர், மதுரை
  • என். பொன்மணி (இணை ஆணையர், வணிக வரித்துறை, ஈரோடு) – கூடுதல் ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, திருச்சிராப்பள்ளி மண்டலம்
  • ஜே. இன்னசென்ட் திவ்யா (விடுப்பில் இருந்தார்) – மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் (கோ-ஆப்டெக்ஸ்)
  • கவிதா ராமு (மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம்) – மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம் (TUFIDCO)
  • டி. மோகன் (இயக்குநர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை) – மேலாண்மை இயக்குநர், மாநகர போக்குவரத்து கழகம்

ஸ்ரேயா பி. சிங் (மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) – இணை ஆணையர் (சுகாதாரம்), பெருநகர சென்னை மாநகராட்சி

ADVERTISEMENT

பி. ரமண சரஸ்வதி (மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு ஃபைபர்நெட் கழகம்) – மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share