தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை (Heavy Rain) பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை வெளுத்தெடுத்து வருகிறது. நேற்று திண்டுக்கல் உட்பட 15 மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்தது.
இன்று
- நீலகிரி
- ஈரோடு
- சேலம்
- தருமபுரி
- கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும்; மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
