விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்காத ஆளுநர்.. காங். ஜோதிமணி எம்.பி. எதிர்ப்பு

Published On:

| By Mathi

Vijay Governor Jothimani

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை ஆளுநர் அர்லேகர் தற்போது வரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கவில்லை என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி குற்றம்சாட்டி உள்ளார்.

இது தொடர்பாக ஜோதிமணி எம்.பி தமது எக்ஸ் பக்கத்தில், “ ஆளுநர் மாளிகையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டமன்றம் மட்டுமே. இதுகுறித்து உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் தெளிவாக உள்ளன. தனிப்பெரும் கட்சியான தவெக தலைவர் திரு.விஜய் அவர்களை மக்கள் முதலமைச்சர் என்று முடிவுசெய்திருக்கிறார்கள்.
மக்கள் தீர்ப்பிற்கு குறுக்கே ஆளுநர் நிற்பது சரியல்ல.
மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு இந்த அளவிற்கு அரசியலும், அரசியல் சாசன விதிகளும் தெரியும் என்று நம்புகிறேன். பாஜக ஆளுநர் மாளிகை வழியாக அரசியல் செய்வதை உடனே நிறுத்தவேண்டும். மாண்புமிகு ஆளுநர் அவர்கள் தவெக தலைவர் திரு.விஜய் அவர்களை உடனடியாக ஆட்சியமைக்க அழைக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share