நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வு முறைகேடுகள் மற்றும் டெல்லியில் நேற்று போராடிய காக்ரோச் ஜனதா கட்சியினருக்கு எதிரான காவல்துறை அடக்குமுறையைக் கண்டித்து பிரதமர் மோடி பதவி விலக கோரி டெல்லியில் இன்று ஜூலை 21-ந் தேதி காங்கிரஸ் (Congress) கட்சி உக்கிர போராட்டம் நடத்தியது.
பிரதமர் மோடி இல்லம் முன்பாக காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர். போலீசார் தடையை மீறி நடந்த போராட்டத்தால் அனைவரும் கைது செய்யப்பட்டு சில மணிநேரம் கழித்து விடுவிக்கப்பட்டனர்.
காங்கிரஸ் கட்சியின் இன்றைய போராட்டத்தால் தலைநகர் டெல்லி 2-வது நாளாக போர்க்களமாக காட்சி தந்தது.
டெல்லி காங்கிரஸ் போராட்ட காட்சிகள்



















