போலி என்.சி.இ.ஆர்.டி புத்தகங்கள்… டெல்லியில் சிக்கிய 32,000 பிரதிகள்! காலியாகக் கிடக்கும் 57% பணியிடங்கள்… என்ன நடக்கிறது என்.சி.இ.ஆர்.டி-யில்?

Published On:

| By Santhosh Raj Saravanan

fake ncert books seized delhi ghaziabad raid ncert vacancy crisis 2026

“குழந்தைகளுக்குப் பாடப்புத்தகம் வாங்குறோம்னு நினைச்சா, அதுல கூடவா டூப்ளிகேட்?” என்று அதிர்ச்சியடைய வைக்கும் செய்தி ஒன்று டெல்லியில் இருந்து வெளியாகியுள்ளது.

லட்சக்கணக்கான மாணவர்கள் படிக்கும் என்.சி.இ.ஆர்.டி (NCERT) பாடப்புத்தகங்களைப் போலவே அச்சு அசல் போலியாகத் தயாரித்த கும்பலை டெல்லி போலீஸார் வளைத்துப் பிடித்துள்ளனர்.

ADVERTISEMENT

அதே நேரத்தில், என்.சி.இ.ஆர்.டி நிறுவனத்தில் பாதிக்குப் பாதி பணியிடங்கள் காலியாகக் கிடப்பதாக வெளியாகியுள்ள தகவல், கல்வித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாட்டியது எப்படி? டெல்லி காவல்துறையின் கிரைம் பிராஞ்ச் மற்றும் என்.சி.இ.ஆர்.டி அதிகாரிகள் இணைந்து காசியாபாத் (Ghaziabad) பகுதியில் உள்ள லோனி கிராமத்தில் திடீர் ரெய்டு நடத்தினர். அங்கு ஒரு குடோனில் சட்டவிரோதமாக இயங்கி வந்த அச்சகத்தைக் கண்டு அதிகாரிகள் மிரண்டு போயினர்.

ADVERTISEMENT
  • கைப்பற்றப்பட்டவை: சுமார் 32,000 போலி என்.சி.இ.ஆர்.டி பாடப்புத்தகங்கள், பிரம்மாண்டமான பிரிண்டிங் மெஷின்கள் மற்றும் அலுமினிய பிளேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
  • மதிப்பு: இதன் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. சுமித், வினோத் ஜெயின், கனிஷ்க் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இந்தப் புத்தகங்களை டெல்லி மற்றும் வட மாநிலங்களில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்து வந்துள்ளனர்.

மறுபக்கம்… ஆளே இல்லப்பா! இப்படிப் போலிப் புத்தகங்கள் ஒருபக்கம் இருக்க, என்.சி.இ.ஆர்.டி நிறுவனத்தில் வேலை செய்யவே ஆட்கள் இல்லாத நிலைமை. கல்வி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் அளித்த தகவலின்படி, மொத்தம் அனுமதிக்கப்பட்ட 2,844 பணியிடங்களில், சுமார் 1,625 இடங்கள் (57%) காலியாகவே உள்ளன!

குறிப்பாக ‘குரூப் சி’ மற்றும் ‘குரூப் பி’ பிரிவுகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமான இடங்கள் காலி. கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சரியான ஆள்சேர்ப்பு நடக்காததே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

ADVERTISEMENT

தற்போது 173 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வந்திருந்தாலும், அது யானைப் பசிக்குச் சோளப்பொரி போலத்தான்!

மாணவர்களே, பெற்றோர்களே… கடையில புக் வாங்கும் போது கொஞ்சம் உஷார்!

  • வாட்டர்மார்க்: ஒரிஜினல் புத்தகத்தில் என்.சி.இ.ஆர்.டி வாட்டர்மார்க் தாளில் தெரியும்.
  • பிரிண்டிங்: போலிப் புத்தகங்களில் எழுத்துகள் மங்கலாகவோ, காகிதம் தரம் குறைவாகவோ இருக்கும்.

சந்தேகமா இருந்தா, புத்தகத்தின் பின்னால் இருக்கும் கியூஆர் (QR) கோடை ஸ்கேன் செய்து பாருங்கள். போலியைப் படித்து மார்க் போச்சுனா திரும்ப வராது!

Photo of author
Santhosh Raj Saravanan
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share