மதிமுக பொதுக் குழு கூட்டத்தை அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ புறக்கணித்துள்ளார்.
மதிமுகவின் உயர்நிலை குழு கூட்டம் சென்னையில் நேற்று ஜூன் 26-ந் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் முதன்மை செயலாளரும் வைகோவின் மகனுமாகிய துரை வைகோ எம்.பி. பங்கேற்கவில்லை.
இதனைத் தொடர்ந்து இன்று ஜூன் 27-ந் தேதி சென்னையில் நடைபெற்று வரும் மதிமுகவின் பொதுக் குழு கூட்டத்திலும் துரை வைகோ எம்.பி. கலந்து கொள்ளவில்லை.
மதிமுகவின் உயர்மட்ட கூட்டங்களை துரை வைகோ தொடர்ந்து புறக்கணித்து வருவது அக்கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே மதிமுகவின் 2 எம்.எல்.ஏ.க்களும் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளனர்.
