தங்கம், வெள்ளி வாங்க நினைக்கவே கூடாது.. இறக்குமதி வரியை அதிரடியாக உயர்த்திய மத்திய அரசு!

Published On:

| By Mathi

Gold Silver

தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிரடியாக உயர்த்தி உள்ளது மத்திய அரசு. இதனால் தங்கம் மற்றும் வெள்ளி விலை மிக மிக கடுமையாக உயரும்.

மத்திய கிழக்கு போர்ச்சூழல் காரணமாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு-க்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மிக கடுமையாக உயர்ந்துள்ளது; இந்திய ரூபாயின் மதிப்பும் கடுமையாக சரிந்து வருகிறது.

ADVERTISEMENT

இதனால் பொதுமக்களுக்கு பிரதமர் மோடி தொடர்ந்து முக்கியமான வேண்டுகோள்களை விடுத்து வருகிறார்.

  • பொதுமக்கள் தங்கம் வாங்குவதால் அன்னிய செலாவணி கையிருப்பு வெளிநாடுகளுக்கு போகிறது.. ஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம்
  • வீட்டில் இருந்தே பணிபுரியுங்கள்
  • சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைத்துவிடுங்கள்
  • ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறுங்கள்

என பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார்.

ADVERTISEMENT

இந்நிலையில் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இதனால் ஏற்கனவே கடுமையாக உயர்ந்து வரும் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் விலை இனி வாங்க நினைக்கவே கூடாத அளவுக்கு உயரும் அபாயம் உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share