நமது மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் சொன்னது போலவே, தமிழக முதல்வர் ஸ்டாலினை மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தற்போது சந்தித்து பேசி வருகிறார்
திமுக- காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டது. காங்கிரஸைப் பொறுத்தவரையில் 41 தொகுதிகளில் பேச்சுவார்த்தையை தொடங்கியது. திமுக 25-ல் தொகுதிகளில் தொடங்கியது.
இதனால் இரு கட்சிகளிடையேயான பேச்சுவார்த்தையில் தேக்க நிலை ஏற்பட்டது. இதனிடையே விஜய்யின் தவெகவுடன் காங்கிரஸ் கை கோர்க்க கூடுமோ? என்ற கேள்விகளும் எழுந்தன.

இதனையடுத்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை. ப.சிதம்பரத்தை அவரது இல்லத்தில் சந்தித்தார். இருவரும் ஆலோசனை நடத்திவிட்டு ஒன்றாக முதல்வர் ஸ்டாலினை சந்திக்க புறப்பட்டனர்.
சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன்சாலை முகாம் அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலினை ப.சிதம்பரம் சந்தித்து பேசினார். இச்சந்திப்பில் செல்வப்பெருந்தகையும் உடன் இருந்தார்.
