டெல்லியில் இன்று மாலை (நவம்பர் 11) 2.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுகுறித்து தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “டெல்லியின் வடக்கு மாவட்டத்தில் மாலை 3.36 மணியளவில் பூமிக்கு அடியில் இருந்து 10 கி.மீ ஆழத்தில் 2.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் பொதுமக்களுக்கோ, கட்டிடங்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை” என்று தெரிவித்துள்ளது.
நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக நவம்பர் 6-ஆம் தேதி டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 3.1-ஆக பதிவாகியிருந்தது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் டெல்லியில் நான்காவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
ICC Worldcup: பேட்டிங் செய்யாமலே வெளியேறியது பாகிஸ்தான் அணி!
சிறையில் காவல்துறையினர் என்னை மிரட்டினர்: அமர்பிரசாத் ரெட்டி