அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் எச்சரிக்கை!

Published On:

| By Mathi

CM Vijay’s Strong Warning to Cabinet Ministers

ஊழல் புகாரில் யாராவது சிக்கினால் உடனடியாக பதவி பறிக்கப்படும் என அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று ஜூலை 16-ந் தேதி முதல்வர் விஜய் தலைமையில் 2-வது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் 40 நிமிடங்கள் நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய்,

  • அரசின் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய அமைச்சர்கள் கவனமாக செயல்பட வேண்டும்; அதிகாரிகள் நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்த வேண்டும்
  • பள்ளிகளுக்கு தேவையில்லாமல் ஆய்வு செய்ய செல்லக் கூடாது
  • பள்ளிகளுக்கு சென்று ரீல்ஸ் போடக் கூடாது; ரீல்ஸ் போடுவதில் கவனமாக இருக்க வேண்டும்; கட்சியினருக்கும் அறிவுரை வழங்க வேண்டும்
  • ஊழல் முறைகேடு புகாரில் சிக்கினால் அமைச்சர்களின் பதவி உடனடியாக பறிக்கப்படும்; தெரிந்தவர்கள்- தெரியாதவர்கள் என யாரையும் பார்க்கமாட்டேன்.
  • நமது அரசு ஊழல், லஞ்சம், முறைகேடு ஆகியவற்றில் ஈடுபடாத அரசாக இருக்க செயல்பட வேண்டும் என எச்சரித்தார்.

வீடியோ

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share