எரிசக்தித் துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தேர்வு செய்யப்பட்ட 383 உதவிப் பொறியாளர்கள் மற்றும் 18 உதவிக் கணக்கு அலுவலர்கள் என மொத்தம் 401 பேருக்குப் பணி நியமன ஆணைகளைத் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று வழங்கினார்.
சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில், மின்சார வாரியத்திற்குத் தேர்வானவர்களில் ஒருவரான அட்சய லட்சுமி என்ற நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்ணும் கலந்துகொண்டார். இதைக் கவனித்த தமிழக முதல்வர் விஜய், மேடையை விட்டு கீழே இறங்கி நேரடியாகச் சென்று அட்சய லட்சுமிக்குத் தனது கைகளால் பணி நியமன ஆணையை வழங்கினார்.
தேர்வான அட்சய லட்சுமிக்கு வரும் ஜூன் 28ஆம் தேதி பிரசவத்திற்கான தேதி என கூறப்படுகிறது. இந்த நெகிழ்ச்சியான சம்பவம் விழா அரங்கில் இருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
