முதலமைச்சர் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றப்படுவதாக தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள முதல்வர் அலுவலகம் மாற்றப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பாக நமது மின்னம்பலத்தில் வங்கக் கடலை நோக்கி முதல்வர் அலுவலகம்? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்தசூழலில் முதல்வர் அலுவலகம் மாற்றப்படுவதை தமிழக அரசின் தலைமை செயலாளர் சாய் குமார் இன்று (ஜூலை 27) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அதில், ”(அ) நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் தற்போது உள்ள செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் அலுவகத்தின் பிரிவுகள், வரவு செலவு பிரிவு, பொருட்காட்சி அனுமதிப்பிரிவு, முதலமைச்சசரின் சமூக (CMO Social Media). செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டு பிரிவு மற்றும் இயக்குநர் அருள், தமிழ் வளர்ச்சி மற்றும் மொழிபெயர்ப்பு, செய்தித்துறை, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையைச் சார்ந்த திருவாளர்கள் பாஸ்கரன், இரவிச்சந்திரன், அ. வே. சுரேந்திரன் மற்றும் த. கலைச் செல்வன் ஆகிய அலுவலர்களின் அலுவலகம் மற்றும் எழுதுப்பொருட்கள் அறை அனைத்தும் உடனடியாக, சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்திற்கு மாற்றம் செய்யப்படுகின்றன.
(ஆ) செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் காலியாக உள்ள இடத்தினை ஆய்வு செய்து, மேலே கூறப்பட்ட அலுவலர்கள் மற்றும் பிரிவுகளுக்கு தேவையான இடத்தினை ஒதுக்கீடு செய்து, அவர்கள் பணிபுரிய தேவையான அனைத்து வசதிகளையும் உடனடியாக செய்து தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்.
(இ) நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் தற்போது செயல்பட்டு வரும் சுற்றுலா துறையின் எழுதுப்பொருட்கள் அறையினை அத்துறை அமைந்துள்ள 9-வது தளத்திற்கு மாற்றம் செய்து கொள்ளுமாறு அத்துறைக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
(ஈ) கோட்டப் பொறியாளர் (கட்டடங்கள்), பொதுப் பணித்துறை அவர்களை, மேலே மாற்றம் செய்யப்பட உள்ள அலுவலர்கள் மற்றும் பிரிவுகளுக்கு தேவையான மேஜை, நாற்காலி, சோபா, கணிணி, கோப்புகள் மற்றும் தொடர்புடைய அனைத்தையும் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திலிருந்து சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்திற்கு மாற்றம் செய்துதருமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
முதலமைச்சரின் அலுவலகம் 10-வது தளத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளதால் தற்போது அத்தளத்தில் செயல்பட்டு வரும் அலுவலகங்கள் மற்றும் அலுவலர்களின் அறைகள் அனைத்தும் (பின்வரும் பட்யலில்) அதற்கு எதிரே தெரிவிக்கப்பட்டுள்ள இடத்திற்கு தற்காலிகமாக மாற்றம் செய்யப்படுகின்றன .

நாமக்கல் கவிஞர் மாளிகையில் 1, 3, 5, 7 மற்றும் 8 ஆகிய தளங்களில் அமைந்துள்ள கூட்ட அரங்குகள் உடனடியாக பொது (கட்டடங்கள்)த்துறைக்கு ஒப்படைக்குமாறு சம்மந்தப்பட்ட துறைகளின் உயர் அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் கூட்ட அரங்கில் விலை மதிப்புள்ள பொருட்கள் இருப்பின் அதை எடுத்துப் பாதுகாக்குமாறு சம்மந்தப்பட்ட துறையின் அலுவலக நடைமுறைப் பிரிவு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
4. உதவி செயற்பொறியாளர் (கட்டடம்), பொதுப்பணித் துறை அவர்கள் மேலே மாற்றம் செய்யப்பட்டுள்ள இடங்களுக்கு தேவையான மேஜை, நாற்காலிகள் அனைத்தையும் இட மாற்றம் செய்து தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்.
5. உதவி செயற்பொறியாளர் (மின்சாரம்) அவர்கள் மாற்றம் செய்யப்பட்ட அனைத்து அறைகளிலும் அலுவலர்கள் அனைவரும் உடனடியாக பணிபுரிய ஏதுவாக மின்சார வசதிகள் சம்மந்தமாக அனைத்து பணிகளையும் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்.
6. பொதுத்துறையின் அலுவலக நடைமுறை-|| பிரிவு தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் மற்றும் பிரிவுகளுக்கு இணைய வசதி (Internet) செய்து தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
7. பொதுத்துறையின் தொலைபேசிகள் பிரிவு, தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் மற்றும் பிரிவுகளுக்கு ஏற்கெனவே உள்ளவாறு தொலைபேசி வசதி செய்து தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இம்மாற்றங்கள் அனைத்தும் உடனடியாக நடைமுறைக்கு வருகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,
