டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் விஜய் முக்கிய தலைவர்களைச் சந்தித்து பேசியுள்ளார்.
தமிழக முதல்வர் விஜய் கடந்த மே 10ஆம் தேதி பொறுப்பேற்றார். இன்றுடன் அவர் பொறுப்பேற்று ஒரு மாதம் ஆகிறது. மே 27ஆம் தேதி முதல் முறையாக டெல்லி சென்று பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். அப்போது தமிழகத்துக்கான நிதி தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்தார்.
தொடர்ந்து இரண்டாவது முறையாக இன்று (ஜூன் 10) டெல்லி சென்றார். பிரதமர் மோடி தலைமையில் அனைத்து மாநில முதல்வர்களுடனான நிதி ஆயோக் கூட்டம், டெல்லியில் நாளை (ஜூன் 11) நடைபெறுகிறது.

இதில் பங்கேற்பதற்காக் சென்ற் விஜய், இன்று குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து பேசினார்.
தொடர்ந்து துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்தார்.

கடந்த முறை டெல்லி சென்ற போது விஜய் காங்கிரஸ் தலைவர்களை சந்திக்காமல் வந்தது பேசு பொருளானது.

இந்தசூழலில் இன்று காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர் சோனியா காந்தியை ஆகியோரை இன்று மாலை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்புகள் நடைபெற்றதாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
