தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிற்கு பதவி உயர்வு!

Published On:

| By Kavi

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உள்ளிட்ட 6 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தமிழக அரசு பதவி உயர்வு வழங்கியுள்ளது.

உதயச்சந்திரன் உள்ளிட்ட 7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ’தலைமைச் செயலர் அந்தஸ்தில்’ நேற்று பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

ADVERTISEMENT

இந்தநிலையில் தமிழகத்தில் முதல்முறையாக தேர்தலை நடத்தவுள்ள பெண் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உள்ளிட்ட 6 பேருக்கு முதன்மை செயலாளர்கள் அந்தஸ்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

1.அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

ADVERTISEMENT

2. சிகி தாமஸ் வைதியன் ஐஏஎஸ் – பேரழிவு மேலாண்மை ஆணையர்

3.சமயமூர்த்தி ஐஏஎஸ் – மனித வள மேலாண்மை துறை செயலாளர்

ADVERTISEMENT

4.எம்.எஸ் .சண்முகம் ஐஏஎஸ்- முதல்வரின் தனி செயலாளர்-2

5.ரீத்தா ஹரிஷ் தாக்கர் -ஐஏஎஸ் பொது மற்றும் மறுவாழ்வு துறை செயலாளர்

6.ஜெயஸ்ரீ முரளிதரன் ஐஏஎஸ் -சமூக நலன் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை செயலாளர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share