பாஜகவில் இருந்து அண்ணாமலை விலக விருப்பம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.
ஐபிஎஸ் அதிகாரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்து செயல்பட்டு வந்த அண்ணாமலை, சமீப நாட்களாக புதிய கட்சி தொடங்க இருப்பதாக சொல்லப்பட்டது
இந்தநிலையில் நேற்று அவர் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
இன்று (ஜூன் 2) டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நிதின் நபினைச் சந்தித்துப் பேசிய அண்ணாமலை 5 பக்க கடிதத்தை கொடுத்துள்ளார்.
அந்த கடிதத்தில் தமிழக அரசியல் நிலவரம் மற்றும் தனது அதிருப்திக்கான காரணங்களை விவரித்துள்ளதாகவும், கட்சியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
