கேரளா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள், கடுமையான விரத முறைகளைப் பின்பற்றி சாமி தரிசனம் செய்வது வழக்கம். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்குச் சென்று வருகின்றனர்.
அந்த வகையில், பாமக தலைவர் அன்புமணி சபரிமலை ஐயப்பனைத் தரிசிப்பதற்காகக் கடந்த ஜூன் 12-ஆம் தேதி மாலை அணிந்து தனது விரதத்தைத் தொடங்கினார். சென்னை உத்தண்டியில் உள்ள விநாயகர் கோயிலில் அவர் முறைப்படி மாலை அணிந்து கொண்டார்.
அவருடன் அவரது மனைவியும், தர்மபுரி தொகுதி எம்.எல்.ஏ-வுமான சௌமியா அன்புமணி மற்றும் அவர்களது பேரன், பேத்தி ஆகியோரும் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினர்.
இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இருமுடி கட்டி பாமக தலைவர் அன்புமணி குடும்பத்துடன் மலை ஏறி சென்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
