முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் 23 பேர் கொண்ட பட்டியலை ஆளுநர் மாளிகை தற்போது வெளியிட்டுள்ளது.
அதில் தூத்துக்குடி எம்எல்ஏ ஸ்ரீநாத்,
அவிநாசி எம்எல்ஏ கமலி,
குமாரபாளையம் எம்எல்ஏ விஜயலட்சுமி,
காஞ்சிபுரம் எம்எல்ஏ ரஞ்சித் குமார்,
கும்பகோணம் எம்எல்ஏ வினோத்,
திருவாடனை எம்எல்ஏ ராஜீவ்,
கடலூர் எம்எல்ஏ ராஜ்குமார்,
அரக்கோணம் எம்எல்ஏ காந்தி ராஜ்,
ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ மதன் ராஜா,
ராஜபாளையம் எம்எல்ஏ ஜெகதீஸ்வரி,
கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ் குமார், (காங்கிரஸ்)
ஈரோடு எம்எல்ஏ விஜய் பாலாஜி,
ராசிபுரம் எம்எல்ஏ லோகேஷ் தமிழ்செல்வன்,
சேலம் தெற்கு எம்எல்ஏ தமிழன் பார்த்திபன்,
ஸ்ரீரங்கம் எம்எல்ஏ ரமேஷ்,
மேலூர் எம்எல்ஏ விஸ்வநாதன், (காங்கிரஸ்)
வேளச்சேரி எம்எல்ஏ குமார்,
ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ தென்னரசு,
கோவை வடக்கு எம்எல்ஏ சம்பத்குமார்,
அறந்தாங்கி எம்எல்ஏ முகமது ஃபர்வாஸ்,
தாம்பரம் எம்எல்ஏ சரத்குமார்,
ஆர்கே நகர் எம்எல்ஏ மரிய வில்சன்,


கிணத்துக்கடவு எம்எல்ஏ விக்னேஷ் ஆகியோர் இன்று காலை 10 மணிக்கு அமைச்சர்களாக பதவி ஏற்பார்கள் என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
கடந்த 10ஆம் தேதி தவெகவின் விஜய் முதலமைச்சராக பதவியேற்றார். அவருடன் ஆனந்த், ஆதவ்அர்ஜுன், அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கட்ராமன், நிர்மல் குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா உள்ளிட்ட 9 அமைச்சர்களும் பதவியேற்றனர் என்பது குறிப்பிடத்தகக்து.
