முள்ளிவாய்க்கால் நினைவுகளை எங்கள் இதயங்களில் சுமப்போம்! – முதல்வர் விஜய்

Published On:

| By Pandeeswari Gurusamy

முள்ளி வாய்க்கால் நினைவுகளை நாங்கள் எங்கள் இதயங்களில் சுமப்போம் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

2009ஆம் ஆண்டு மே 18ம் தேதி இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.

ADVERTISEMENT

போரின் இறுதி நாட்களில், சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட போர் நடத்தப்படாத இடம் எனக்கூறப்பட்ட (No Fire Zone ) முள்ளிவாய்க்காலில் தஞ்சம் அடைந்தனர். ஆனால் அங்கிருந்த அப்பாவி மக்கள் மீது வான் வழி, தரைவழி மற்றும் கடல் வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் இரு தரப்பிலும் லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்.

இந்த போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் வகையில்தான், ஒவ்வொரு ஆண்டும் மே 18ஆம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த போரினால் வெவ்வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்த இலங்கை தமிழர்கள் பலர் இந்த நாளை நினைவு கூர்ந்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் இன்று (மே 18) தமிழக முதல்வர் விஜய் தனது எக்ஸ் பதிவில்,”
முள்ளிவாய்க்கால் நினைவுகளை எங்கள் இதயங்களில் சுமப்போம்! கடல்கடந்து வாழும் எங்கள் தமிழ் உறவினர்களின் உரிமைகளுக்காக நாங்கள் என்றும் ஒற்றுமையுடன் நிற்போம்!” என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share