ஆதரவு கடிதங்களுடன் ஆளுநரை சந்தித்த விஜய்

Published On:

| By Mathi

Vijay Governor File Pic

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க சிபிஐ, சிபிஎம் கட்சிகள் அளித்த ஆதரவு கடிதங்களுடன் ஆளுநர் அர்லேகரை அக்கட்சித் தலைவர் விஜய் சந்தித்தார்.

சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் வென்ற தவெக தலைவர் விஜய் ஏற்கனவே 2 முறை ஆளுநர் அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைக்கும்படி கோரிக்கை விடுத்தார். ஆனால் ஆட்சி அமைப்பதற்கான 118 எம்.எல்.ஏக்கள் ஆதரவை விஜய் தரவில்லை என ஆளுநர் மாளிகை அறிவித்திருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில் 4 எம்.எல்.ஏக்களைக் கொண்ட் சிபிஐ, சிபிஎம், விஜய்க்கு ஆதரவை தெரிவித்துள்ளன. தங்களது முடிவையே 2 எம்.எல்.ஏக்களைக் கொண்ட விசிக தலைவர் திருமாவளவனும் ஏற்பார் எனவும் சிபிஐ மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கூறியிருந்தார்.

இதனையடுத்து கட்சிகளின் ஆதரவு கடிதங்களுடன் ஆளுநர் அர்லேகரை விஜய் தற்போது சந்தித்து மீண்டும் ஆட்சி அமைக்க அழைக்கும்படி கோரியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share