உதயநிதி கைதுக்கு எதிராக போராட்டம்.. ஓபிஎஸ், அன்பில் மகேஷ் கைது

Published On:

| By Pandeeswari Gurusamy

தஞ்சையில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் ஜோசப் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்துச் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 4) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலினின் நீலாங்கரை இல்லத்தின் முன்பாக திமுகவினர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சி தலைவர் கைதை கண்டித்து மதுரை மாவட்டத்தில் மூன்று இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேனியில் உதயநிதி ஸ்டாலின் கைதைக் கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் கைது செய்யப்பட்டார்.

ADVERTISEMENT

திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் கண்டனப் போராட்டம் நடைபெற்றது. கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் உடனடி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, கோவை காந்திபுரம் அண்ணா சிலை முன்பாகத் திரண்ட ஆயிரக்கணக்கான திமுகவினர், தமிழக அரசு மற்றும் காவல்துறையைக் கண்டித்துக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு, அண்ணா சிலையிலிருந்து திரளான தொண்டர்கள் பேரணியாகப் புறப்பட்டு காந்திபுரம் பிரதான சாலைக்குச் சென்றனர். அங்கு காவல்துறையின் தடையை மீறிச் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென நடத்தப்பட்ட இந்தச் சாலை மறியலால் காந்திபுரம் பிரதான சாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள முக்கிய இணைப்புச் சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. நீலகிரி மாவட்டம் உதகையிலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ADVERTISEMENT

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், காட்பாடி, திருப்பூர், பொள்ளாச்சி எனத் தமிழகம் முழுவதும் திமுகவினர் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கரூரிலும் பேரணியாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல், விஜய் மற்றும் திரிஷா குறித்து உதயநிதி பேசிய பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துத் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்தவர்களும் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share