தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசின் உள்துறை செயலாளர் மணிவாசன் பிறப்பித்துள்ள உத்தரவில்,

ADVERTISEMENT
  • “தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த அபிஷேக் குப்தா, சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவப்பிரசாத், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • திருச்சி ஆயுதப்படை டிஐஜி விஜயலட்சுமி சென்னை ஊர்க்காவல் படை டிஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • சென்னை குற்றப்பிரிவு மத்திய மண்டல காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சண்முகப்பிரியா சென்னை மேற்கு மண்டல ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல்துறை கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • இதேபோல் ராமேஸ்வரம் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் மீரா சென்னை அலுவலக மற்றும் கணினி மயமாக்கல் உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அபிஷேக் குப்தா சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share