தொகுதி மறுவரையறைக்கு எதிராக விஜய் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் விஜய் இன்று (ஆகஸ்ட் 12) முன்மொழிந்த, தொகுதி மறுவரையறைக்கு எதிரான அரசினர் தனித் தீர்மானம் திமுக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் தலைமையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி எம்.பி-க்கள் கூட்டத்தில், தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், இன்று தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தொகுதி மறுவரையறை தொடர்பான அரசினர் தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.

ADVERTISEMENT

இந்தத் தீர்மானத்திற்கு திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஐ.யூ.எம்.எல் (IUML), மனிதநேய ஜனநாயக கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

இதனைத் தொடர்ந்து, சட்டமன்றத்தில் முதலமைச்சர் முன்மொழிந்த தனித் தீர்மானத்தின் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இறுதியில், தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகச் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்தார்.

ADVERTISEMENT

இந்த தீர்மானத்திற்கு அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share