காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை மீதான மானிய கோரிக்கையை முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று (செப்டம்பர் 3) தாக்கல் செய்தார்.
காவல் துறைக்கான அறிவிப்புகளின் விபரங்கள்
- மாநிலத்திலுள்ள காவல் நிலையங்களில் 29,108 கூடுதல் காவலர் பணியிடங்கள் படிப்படியாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் உருவாக்கப்படும். தமிழ்நாடு காவல் படையில் இவ்வாண்டு 5,000 பெண் காவலர்கள் உட்பட மொத்தம் 10,000 காவலர்கள் நியமிக்கப்படுவர்.
- போதைப்பொருள் பயன்பாட்டை வெற்றிகரமாக ஒழிக்கும் கிராமம் ஒன்றுக்கு ரூ.10 லட்சம் வீதம் 50 கிராமங்களுக்கு வழங்கப்படும்.
- ரூ.212 கோடி ஒதுக்கீட்டில் காவல்துறை நவீனமயமாக்கப்படும். செயற்கை நுண்ணறிவு, நவீன டிஜிட்டல் தடயவியல், நிகழ்நேர கண்காணிப்பு அமைப்பு, நவீன தகவல் தொடர்பு மற்றும் கட்டுப்பாட்டு மையங்களை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
- லஞ்சம், லாவண்யமன்ற அரசு அலுவலகங்களை உருவாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் சிறப்புப் பிரிவுகளுக்கும் அனுமதித்திருந்த சில்லறை செலவினம் (Contingency Fund) உயர்த்தி வழங்கப்படும்.
- பணியின் போது துணிச்சலுடன் பணியாற்றி உயிரிழந்த காவல் துறையினரின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.1 கோடி வழங்கப்படும்.
- பணிக்காலத்தில் இறக்கும் காவலர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் கருணைத்தொகை (Ex-gratia payment) ரூ.20 லட்சம் ரூபாயிலிருந்து ரூ.30 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
- வண்டலூர் அருகே அமைந்துள்ள தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் பன்னோக்கு உள் விளையாட்டு அரங்கம் மற்றும் வெளிப்புற விளையாட்டு வசதிகள் சுமார் ரூ.23 கோடி செலவில் அமைக்கப்படும்.
- சேலம் மற்றும் விழுப்புரம் வட்டார தடய அறிவியல் ஆய்வகத்தில் புதிய மரபணு ஆய்வுப் பிரிவுகள் (DNA Testing Facility) சுமார் ரூ.14 கோடி செலவில் நிறுவப்படும்.
- காவல்துறையின் செயல் திறனை மேம்படுத்துவதற்காக புதிய வாகனங்கள் ரூ.200 கோடி செலவில் வாங்கப்படும்.
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அறிவிப்பு விபரங்கள்:
- ஆறு இடங்களில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையங்கள் சுமார் ரூ.16 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும்.
- 10 இடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 131 புதிய குடியிருப்புகள் ரூபாய் சுமார் ரூ.80 கோடி செலவில் கட்டப்படும்.
- Fire and Rescue Service Training Academy-ன் இரண்டாம் கட்டப்பணிகள் ரூ.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
