Students Opinion on Governor RN Ravi Activities
ஏப்ரல் 25, 26 ஆகிய தேதிகளில் உதகையில் துணை வேந்தர்கள் மாநாடு நடைபெறும் என்று ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இதனையடுத்து ஏப்ரல் 17-ஆம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இந்தநிலையில், ஏப்ரல் 25, 26 ஆகிய தேதிகளில் உதகையில் துணை வேந்தர்கள் மாநாட்டிற்கு ஆளுநர் ரவி அழைப்பு விடுத்துள்ளார். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஆளுநரின் இந்த துணைவேந்தர் மாநாடு குறித்து மின்னம்பலம் குழு சென்னையில் பல்கலைக்கழக மாணவர்களிடம் கருத்து கேட்டார்கள்.
மாணவர்கள் கூறிய பதில்களை இங்கு பார்க்கலாம்… Students Opinion on Governor RN Ravi Activities

அமர்
அடிப்படையில் இன்றைக்கு எல்லா இடங்களிலும் ஆளுநர் என்கிற பொறுப்பு தேவையில்லாத ஒன்று என்று தான் பேசப்படுகிறது. ஆளுநருக்கு என்று சில வரையறைகள் உள்ளது. அதற்கு உட்பட்டு தான் வேலை செய்ய வேண்டும்.
ஆளுநர் தன்னிச்சையாக வேலை செய்ய முடியாது. பல இடங்களில் தமிழக அரசின் மசோதாக்களை கட்டுப்படுத்துகிறார். இப்படி உள்ள சூழலில் இவ்வளவு தூரம் நடந்த பின்னும் இன்றைக்கு உச்ச நீதிமன்றம் சரமாரியான கேள்விகளை எழுப்பி உள்ளது. இருப்பினும் ஆளுநருக்கு எப்படி இந்த அதிகாரம் வந்தது?
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எல்லாம் பொருட்படுத்தாமல், நான் இன்னும் இந்த அதிகாரத்தில் தான் இருக்கிறேன் என்று கட்டமைப்பதற்காக இது மாதிரியான நடவடிக்கையில் ஈடுபடுகிறார்.

செந்தமிழ் பாரதி Students Opinion on Governor RN Ravi Activities
ஆளுநர் துணைவேந்தர் மாநாடு கூட்டியிருப்பது இந்திய அரசமைப்பையே அவமதிக்கும் செயல். அதை மாணவர்களாகிய நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
ஆளுநராக பதவியேற்றதிலிருந்து மக்களுக்கும் அரசு சார்ந்த விஷயங்களிலும் நல்லவை எதையும் செய்யவில்லை. கெட்ட விஷயத்தை தான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார். அரசமைப்பு சட்டத்தை காலி செய்யும் விதமாகத்தான் நடந்து கொள்கிறார்.
அப்படியே தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் அரசமைப்பை எழுதியதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும். அந்த மாநாட்டில் துணைவேந்தர்கள் கலந்து கொள்ளாமல் இருந்தால் நன்றாக இருக்கும். ஏனென்றால் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே என்று உச்ச நீதிமன்றமே சொல்லிவிட்டது.

ஆர்த்தி Students Opinion on Governor RN Ravi Activities
ஊட்டியில் துணைவேந்தர்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்திருப்பது என்பது நீதிமன்றத்திற்கு எதிரான ஒரு செயலாக பார்க்கிறோம். ஆளுநரின் நடவடிக்கை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காத ஒரு செயலாக இருக்கிறது.
உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு வேண்டுமானாலும் கொடுங்கள், ஆனால் நான் விருப்பப்பட்டதை தான் செய்வேன், நான் துணைவேந்தர்களின் மாநாட்டை கூட்டுவேன் என்பது முற்றிலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானது.
ஏன் இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்றால், பல்கலைக்கழகங்களை தொடர்ச்சியாக குறிவைத்து காவிமயம் ஆக்கக்கூடிய முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு ஒரு கருவியாக துணைவேந்தர்களை அவர்கள் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
தற்பொழுது அந்த அதிகாரம் தன்னிடமிருந்து போகிறது என்ற காரணத்திற்காக மீண்டும் அந்த அதிகாரம் தன்னிடம் தக்க வைத்துக் கொள்வதற்கு இது போன்ற செயல்களை செய்கிறார்கள்.

பாஸ்கர் Students Opinion on Governor RN Ravi Activities
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி பார்த்தால் நீதித்துறையை இவர்கள் யாரும் மதிக்கவில்லை என்பது போல் தான் தெரிகிறது.
ஒரு தீர்ப்பு வருகிறது, அதற்கு எதிராக ஒரு மாநாடு நடக்கிறது என்றால் அவர்கள் நீதித்துறையை மதிப்பதில்லை என்று தான் தெரிகிறது.
தன்னுடைய சிந்தனையை எப்படியாவது அரசின் மீதும் மக்களின் மீதும் திணிக்க வேண்டும் என்பதுதான் இந்த ஆளுநருடைய நடவடிக்கையாக ஆரம்பத்தில் இருந்தே இருக்கிறது.
மக்களின் அடிப்படை தேவையே கல்வி என்னும் பட்சத்தில் கல்வியில் கை வைத்தால் மக்கள் கேள்வி கேட்க மாட்டாங்க என்று அவர்களுடைய எண்ணமாக உள்ளது. அதனால்தான் கல்வித்துறையில் தொடர்ந்து ஒன்றிய அரசு இடர்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.
அதனால் தான் நீட் போன்ற தேர்வுகளை கொண்டு வந்து மாணவர்கள் படிக்க கூடாது என்று நினைக்கிறார்கள். அதிகாரத்தின் எதிரியே கல்விதான்.

யாழினி Students Opinion on Governor RN Ravi Activities
பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் ஆளுநர் முற்போக்கான கருத்துக்களை விதைக்க வேண்டும். ஆனால், அவர் அப்படியில்லாமல் ஆர்எஸ்எஸ் கொள்கைகளையும் பாஜகவின் கொள்கையையும் சேர்த்து பிற்போக்குத்தனமான கருத்துக்களை மாணவர்களிடம் கொண்டு போய் சேர்க்கிறார்.
துணை வேந்தர் மாநாட்டை ஆளுநர் கூட்டியிருப்பது உச்ச நீதிமன்றத்தின் 142 கீழ் கொடுக்கப்பட்ட அந்த தீர்ப்பை அவமதிப்பதாகவும் தமிழ்நாட்டை அவமதிக்கிறதாகவும் உள்ளது. ஆளுநர் இதை திரும்ப பெற வேண்டும். Students Opinion on Governor RN Ravi Activ

விமல் Students Opinion on Governor RN Ravi Activities
தொடர்ச்சியாக ஆளுநரின் இந்த நடவடிக்கை என்பது அரசமைப்பிற்கு விரோதமான ஒன்று. 1940-களில் சாவர்க்கர்களின் வாரிசுகள் முன்வைத்த அரசியல் ப்ராஜெக்ட். அன்றே அவர்கள் அரசமைப்பை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள். அதனால் தான் தற்பொழுது துணைவேந்தர்கள் மாநாட்டையும் ஆளுநர் கூட்டியிருக்கிறார்.
பத்தாண்டுகளில் பாஜக ஆர்எஸ்எஸ்-இன் அனைத்து நியமன உறுப்பினர்கள் அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிகளைத் தாண்டி அரசு நியமிக்கின்ற எல்லா பதவிகளிலும் அமர்ந்து கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நியமிக்கின்ற அரசு சட்டங்களாக இருந்தாலும் தீர்மானங்களாக இருந்தாலும் அதை மிகவும் தாமதப்படுத்தி அரசமைப்பின் முக்கிய கூறுகள் அனைத்தையும் சிதைக்க கூடிய வேலைகளை செய்கிறார்கள்.

வீர வேல் Students Opinion on Governor RN Ravi Activities
முதலமைச்சரும் சட்டமன்ற உறுப்பினர்களும் அவர்கள் சொந்த தொகுதி மக்களுக்கான உட்கட்டமைப்பு மேம்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட மசோதாக்களை தடுத்து நிறுத்துகிறார். ஒன்றிய அரசால் நேரடியாக நியமிக்கும் நபர் தான் ஆளுநர். அவருக்கும் மக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
ஆனால் ஒன்றிய அரசு அவர்கள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களை ஆளுநர்களை வைத்து அதிகார துஷ்பயோகம் செய்கிறார்கள்.
இதை கடந்த நான்கு ஆண்டுகளாகவே ஆளுநர் செய்து கொண்டிருக்கிறார். முற்போக்கு சிந்தனையாளர்கள் கொண்ட தமிழ் மண்ணில் ஆர்.எஸ்.எஸ் பாஜகவிற்கு இடமில்லை.
அந்த அடிப்படையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகும் துணை வேந்தர்கள் மாநாடு கூட்டுவதும், அதில் துணை குடியரசு தலைவரை அழைப்பதும் ஒன்றிய அரசின் தலையீடு இருப்பது தெரிகிறது.
– விஷால்
முழு வீடியோவைக் காண…