சீதா ராமம் : கண்ணீர்விட்டு அழுத துல்கர் சல்மான்

Published On:

| By Kavi

சீதா ராமம் படத்தின் ரிலீஸ் அன்று கண்ணீர்விட்டு அழுதேன் என்று நடிகர் துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.

துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா உட்படப் பலர் நடித்துள்ள சீதா ராமம் படத்தை ஹனு ராகவபுடி இயக்கியுள்ளார்.

ADVERTISEMENT

தெலுங்கில் தயாரிக்கப்பட்ட இந்தப்படம் தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டுக் கடந்த வாரம் வெளியானது. பொதுவாகத் தெலுங்கு சினிமா ரசிகர்கள் கரம் மசாலா நிரம்பிய தெலுங்கு படங்களை மட்டுமே ரசித்து வெற்றி பெற செய்வது வழக்கம்.

குறிப்பாகத் தெலுங்கு கதாநாயகர்களுக்கு மட்டுமே முன் உரிமை கொடுப்பார்கள். பாகுபலி படம் எல்லா மொழிகளிலும் வெற்றிபெற்றது . அதன் தொடர்ச்சியாக பாகுபலி 2, புஷ்பா, ஆர்ஆர்ஆர்,கேஜிஎஃப் படங்களும் வெற்றிபெற்றது. தெலுங்கு ரசிகர்களின் ரசனை மாற்றம் கண்டு தற்போது பிற மொழி கதாநாயகர்கள் நடிக்கும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களைப் பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

ADVERTISEMENT

மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சீதாராமம் படத்தில் வழக்கமான தெலுங்கு படங்களுக்குரிய எந்த கரம் மசாலாவும் இல்லை . அதிரடி சண்டைக் காட்சிகள், குத்து பாடல்கள் இல்லை. ஆனால் படம் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்று ஆந்திர, தெலங்கானா மாநிலங்களில் வசூலை குவித்து வருகிறது.
இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில், நெகிழ்ச்சியான பதிவு ஒன்றைத் துல்கர் சல்மான் வெளியிட்டுள்ளார்.

அதில், “இந்த ‘சீதா ராமம்’ கதையோடு இயக்குநர் ஹனு ராகவபுடியும் தயாரிப்பாளரும் என்னை அணுகியபோது, இந்தப் படம் தரமாக இருக்கும் என்று நம்பினேன். அது உறுதியாகி இருக்கிறது. திரைப்படம் என்பது பல கலைஞர்கள் மற்றும் திறமைகளின் கூட்டு முயற்சி. அனைவரின் பங்களிப்பாலும் இந்தப் படம் அழகானதாக மாறியது. படத்தின் ரிலீஸ் அன்று நான் அழுதேன். படத்தை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டதை நினைத்து வியந்தேன். என் மீது நீங்கள் காட்டும் அன்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இராமானுஜம்

சீதா ராமம் – விமர்சனம்!

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share