கேட்கும் போதெல்லாம் காதுகளில் தேனாகப் பாயும் வசீகரக் குரலுக்கு சொந்தக்காரரான ஜானகி இன்று (ஜூலை 11) காலமானார். அவருக்கு வயது 88.
17க்கும் மேற்பட்ட மொழிகளில் 48,000 பாடல்களை பாடியுள்ளார்.
குழந்தையாய், குமரியாய், முதியவளாய் ஒரு மைக் முன்னால் குரல் வித்தை காட்டும் அசாத்திய கலைஞர் ஜானகி.
தாலாட்டின் பாசத்தையும், காதலின் சிணுங்கலையும், சோகத்தின் வலியையும் தன் மூச்சுக் காற்றிலேயே கடத்திவிடும் அலாதித் திறன் கொண்டவர்.
பல்லாயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களின் இதயங்களை வென்ற ஜானகி இன்று காலமானார்.
அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில், ”தன்னுடைய தேனமுதக் குரலால் தலைமுறை தலைமுறையாக மக்களை மகிழ்வித்த ஜானகி அம்மா அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும்” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
