உதயநிதி ஸ்டாலினுக்கு அனுமதி மறுப்பு : திமுக வெளிநடப்பு!

Published On:

| By Kavi

காவல்துறை மானியக் கோரிக்கை மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச அனுமதி மறுக்கப்பட்டதால் திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

காவல் துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது பல்வேறு கட்சியை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள், சட்டம் ஒழுங்கு தொடர்பாக எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வர் விஜய் இன்று பதிலளித்து பேசினார்.

ADVERTISEMENT

பேரவை ஆரம்பித்தது முதலே திமுகவினர் எழுந்து நின்று அமளியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து முதல்வர் பேச பேச, திமுகவினர் கோஷம் எழுப்பினர்.

ADVERTISEMENT

முதல்வரின் பதிலுரைக்கு பிறகு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச அனுமதிக்க வேண்டும் என்று திமுகவினர் கோரினர்.

ஆனால் சபாநாயகர், நான் அனுமதி தருவதாக இல்லை. இந்த பதிலுரைக்கு பின் வனத்துறைக்கு அனுமதி வழங்கிவிட்டேன். நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று கூறினார்.

ADVERTISEMENT

இதனால் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share