முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விடுதலையான பேரறிவாளன், தமிழ்நாடு- புதுச்சேரி பார் கவுன்சிலில் இன்று ஏப்ரல் 27-ந் தேதி வழக்கறிஞராக பதிவு செய்தார்.
1991-ம் ஆண்டு மே 21-ந் தேதி ராஜீவ்காந்தி ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் பேரறிவாளனும் ஒருவர். 31 ஆண்டுகள் சிறை தண்டனைக்குப் பிறகு உச்சநீதிமன்றத்தால் 2022-ம் ஆண்டு பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நளினி உள்ளிட்ட 6 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் சட்டம் பயின்ற பேரறிவாளன், இன்று தமிழ்நாடு- புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தர்மதிகாரி முன்னிலையில் பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பேரறிவாளன் பதிவு செய்தார்.
