சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவளித்த அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் மீண்டும் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இன்று எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் தரப்பில் இருந்த 5 எம்எல்ஏக்கள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இன்று நேரில் சந்தித்தனர்.
எஸ்.எம். சுகுமார் (ஆற்காடு தொகுதி)
ஹரி பாஸ்கர் (அந்தியூர் தொகுதி)
திலீபன் ஜெய் சங்கர் (சங்கரன்கோவில் தொகுதி)
நடராஜன் (காங்கேயம் தொகுதி)
மோகன் (பண்ருட்டி தொகுதி)
ஆகிய 5 சட்டமன்ற உறுப்பினர்களும் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துத் தங்களது ஆதரவை மீண்டும் தெரிவித்துக் கொண்டனர். இந்நிலையில் சிவி சண்முகம் அணியில் இருந்த மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமாரவேல், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் மற்றும் தாராபுரம் எம்எல்ஏ சத்தியபாமா ஆகிய 3 பேரும் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளனர். ராஜினாமா செய்த 3 எம்எல்ஏக்களும் தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
“விஜய்க்கு ஆதரவளித்தது தவறு” – கூட்டாகப் பேட்டி
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளித்த 5 எம்.எல்.ஏ-க்களும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் பேசுகையில்:
“சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, கட்சித் தலைமையின் முடிவை மீறித் தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது நாங்கள் செய்த மிகப்பெரிய தவறு என ஆற்காடு தொகுதி எம்எல்ஏ சுகுமார் தெரிவித்தார்.
