முடி உதிர்வை குறைத்து மீண்டும் வளர்க்க உதவும் இயற்கை வழிகள்!

Published On:

| By Minnambalam Desk

முடி உதிர்வது பலருக்கும் இயல்பான ஒன்றுதான். தினமும் 50 முதல் 100 முடிகள் வரை உதிர்வது சாதாரணமாகக் கருதப்படுகிறது.

ஆனால், திடீரென அதிகமாக முடி கொட்டுவது அல்லது தலைமுடி அடர்த்தி குறைவது கவனிக்க வேண்டிய விஷயம்.

ADVERTISEMENT

இதற்குப் பின்னால் மரபியல், மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கலாம்.

தினசரி தலை மசாஜ் உதவுமா?

ADVERTISEMENT

விரல் நுனிகளால் மெதுவாகத் தலையை மசாஜ் செய்வது உச்சந்தலையின் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், முடியின் அடர்த்திக்கு உதவவும் வாய்ப்புள்ளது. ஒரு ஆய்வில் தினமும் 4 நிமிடங்கள் மசாஜ் செய்தவர்களிடம் முடி வளர்ச்சியில் முன்னேற்றம் காணப்பட்டது.

கற்றாழை, தேங்காய் எண்ணெய்

ADVERTISEMENT

கற்றாழை உச்சந்தலையைச் சாந்தப்படுத்தவும், பொடுகைக் குறைக்கவும் உதவலாம். தேங்காய் எண்ணெயில் உள்ள லாரிக் அமிலம் முடியின் புரத இழப்பைக் குறைக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இவை முடியை மீண்டும் வளர்க்கும் உறுதியான சிகிச்சை என்று கூற முடியாது.

வெங்காயச் சாறு, ரோஸ்மேரி எண்ணெய்

வெங்காயச் சாறு குறிப்பாக சில வகையான அலோபீசியாவில் முடி வளர்ச்சிக்கு உதவக்கூடும் என்று சிறிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ரோஸ்மேரி எண்ணெயும் முடி வளர்ச்சிக்கு உதவக்கூடியதாக ஆய்வுகளில் பார்க்கப்பட்டுள்ளது.

ஆனால் அத்தியாவசிய எண்ணெய்களை நேரடியாகத் தலையில் பயன்படுத்த வேண்டாம்.

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

முடி உதிர்வுடன் சோர்வு, அரிப்பு, மனநிலை மாற்றம் போன்ற அறிகுறிகளும் இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது. காரணத்தை கண்டறியாமல் வீட்டு வைத்தியங்களை மட்டும் நம்புவது சரியான அணுகுமுறை அல்ல. முடி உதிர்வுக்கான காரணத்தைப் பொறுத்து சிகிச்சை மாறுபடும்.

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share